states

பழனி கோவில் வழிபாடு தீர்ப்பு: சிபிஐ கண்டனம்

சென்னை,பிப்.1- இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து மத கடவுள்  மீது நம்பிக்கை இல்லாத வர்கள் பழனி கோவில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், இது மனிதர்களை மதம் சார்ந்து பிளவுப்படுத்தும் தீர்ப்பு என்றும் உடனடியாக இதை  மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித் துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்  இது குறித்து வெளியிட்டி ருக்கும் அறிக்கையில், “சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை, இந்து சமய கோவில்களில்  இந்து சமயம் சாராதவர் களை அனுமதிக்கக் கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தமிழ்நாட்டில் சமய  எல்லைகள் கடந்து அனைத்து சமய நம்பிக்கை களையும் சமமாக கருதி யும், மதித்தும் வருகிற நல்லிணக்க பண்புக்கு எதிரானது. நாகூர் தர்க்காவிலும், அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்திற்கும், பழனி கோவிலுக்கு, அனைத்து சமய நம்பிக்கை உள்ளவர் கள் சென்று வருவது வழிவழியான பழக்கமாக உள்ளது. இதன் மூலம் சமய வழிகள் வேறுபட்டாலும் எல்லா சமயங்களும் அன்பு, கருணை, இரக்கம் சகிப்புத்தன்மை என நல்லிணக்க உணர்வை தான் போதிக்கிறது என  வேதங்களையும், சாத்தி ரங்களையும் கற்றுத் தேர்ந்த சுவாமி விவேகானந் தர், வள்ளலார், ராமானு ஜர் போன்ற சமய சான்றோர் கள் போதித்தும் வாழ்ந்தும் காட்டியுள்ளனர். இந்த ஆன்மீக வரலாற்று மரபுகளை கருத்தில் கொள் ளாமல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கி யுள்ள தீர்ப்பு சமூகத்தில் பகைமையை வளர்க்கும் பிளவு சக்திகளை ஊக்கப் படுத்தும் பேராபத்தானது. எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் இத்தீர்ப்பை வழங்கிய நீதியரசர் மறு பரிசீலனை செய்து தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துவதுடன் இந்து சமய அறநிலையத் துறையும், தமிழ்நாடு அர சும் இத்தீர்ப்பை செயல் இழக்க செய்ய உரிய சட்ட  நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்திருக்கிறார்.