states

‘முதுநிலை ஆசிரியர் -கல்வி பயிற்றுநர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தலாம்’

மதுரை, செப்.21-  முதுநிலை ஆசிரியர் மற்றும் ஒரு  கல்வி பயிற்றுனர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திக் கொள்ளலாம் என்றும் இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சீர் மரபினர் சங்கத்தின் தலைவர் ஜெபஸ்மணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு வில், “தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம்  கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதுநிலை  ஆசிரியர் உடற்கல்வி பயிற்றுனர் தேர்வு முடிவுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதில் எம்பிசிவி, டிஎன்சி  மற்றும் எம்பிசி  என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி தேர்வு பட்டியலை வெளி யிட்டுள்ளனர். இது சட்ட விரோதமானது. ஏற்கனவே இது போல மூன்று பிரிவுகளின் கீழ் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஆனால் அதனை கருத்தில்  கொள்ளாமல் ஆசிரியர் தேர்வு  வாரியம் உடற்கல்வி தேர்வு செய்யப்பட் டோர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற உள்ளது. இது ஏற்கத்தக்கது  அல்ல. ஆகவே மிகவும் பிற்படுத்தப்பட்ட வருக்கான இட ஒதுக்கீட்டை மூன்று  பிரிவுகளின் கீழ் பிரித்து வெளியிடப்பட் டுள்ள தேர்வு பட்டியலை ரத்து செய்து  உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தி ருந்தார்.  இந்த வழக்கின் விசாரணை புதனன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நடை பெற்றது. அப்போது, சான்றிதழ் சரி பார்ப்பை நடத்திக் கொள்ளலாம். ஆனால் இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்  டது என்று நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

;