தமிழ்நாட்டில் சேலம், தஞ்சாவூர், இராமநாதபுரம், வேலூர் நகரங்களுக்கு உதான் திட்டத்தில் விமான சேவை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதில், சேலத்துக்கு மட்டுமே உதான் திட்டத்தில் விமானம் இயக்கப்பட்டது. நாடு முழுவதும் உதான் திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. முதல்கட்டத்தில் 132 வழித்தடங்களிலும் 2வது கட்டத்தில் 228 வழித்தடங்களிலும் 3வது கட்டத்தில் 305 வழித்தடங்களிலும் விமானம் இயக்கப்படவில்லை என்று அம்பலமாகியுள்ளது. திட்டமிடப்பட்ட 774 வழித்தடங்களில் 403 தடங்களில் விமான சேவை கடைசி வரை தொடங்கப்படவே இல்லை என்பது சிஏஜி ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.