சிறு-குறு, நடுத்தர நிறுவன குழுமத்தின் தலைவரானார் முத்துராமன்
சென்னை, அக்.20- ஒன்றிய அரசின் சிறு-குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்எஸ்.எம்.இ) வளர்ச்சி குழுமத்தின் புதிய தலை வராக தமிழ் நாட்டைச் சேர்ந்த ஈ.முத்து ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்த குழுமத்தின் உபத் தலைவ ராக அவர் பணியாற்றி வந்தார். அவரது சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக வளர்ச்சி குழுமத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் நியமன ஆணையை வழங்கினார். அமெரிக்காவின் புகழ் பெற்ற விஸ்டம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள மதுரையை சேர்ந்த முத்து ராமன் , ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நலதிட்டங்களில் ஈடுபாடு கொண்டவர். இதற்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தின் மாநில கிடங்குகளின் இயக்குனராகவும், இந்திய உணவுக் கழக ஆலோசனைக் குழு உறுப்பினரா கவும் இந்திய தரநிலைகள் பணிய கத்தின் நிர்வாக குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர் ஆவார்.
ஆம்புலன்ஸ் வழியை மறித்தால் ரூ.10,000 அபராதம்!
சென்னை, அக். 20- சாலைகளில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்கள் செல்லும்போது வழிவிடத் தவறினால், இடையூறு ஏற்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதற்கான புதிய அரசா ணையை தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களை அதி வேகமாக ஓட்டி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், பைக் ரேசில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்க ளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டு வந்த ரூ. 5 ஆயிரம், ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. அபாயகரமான விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டுதல், மாசு ஏற்படுத்தும் வாகனங் கள், தடை செய்யப்பட்ட இடங்களில் தேவையற்ற ஒலி எழுப்பும் ஹாரன் களை பயன்படுத்தினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். சாலை விபத்து களைத் தடுக்கும் வகையில் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த அபராதத் தொகைகளை உயர்த்தி இந்தப் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வீடுகளை சூழ்ந்த மழை - வெள்ளம்: மக்கள் தவிப்பு
ஓசூர், அக்.20- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகர் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் மிகவும் அவதியடைந்தனர். குறிப்பாக 6-வது வார்டுக்குட்பட்ட கே.சி.சி.நகர் பகுதியில் வெள்ளநீர் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தும், அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தை மூழ்கடித்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். தொழிற்சாலைகளுக்கும் அலுவல கங்களுக்கு செல்பவர்களும், பள்ளி குழந்தைகளும் மிகவும் அவதிப்பட்ட னர். இதையடுத்து, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அலுவலர்கள், மாநக ராட்சி ஊழியர்கள் அங்கு சம்பவ தீய ணைப்பு துறை வீரர்கள் ஒத்துழைப் புடன் ஜே.சி.பி எந்திரம் மூலம் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட னர். இதேபோல் அருகிலுள்ள சமத்து வபுரம் பகுதியிலும் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் தவிப்புக்குள்ளா னார்கள்.
பரிந்துரையின்றி போதை மருந்துகள் விற்கக் கூடாது
சென்னை, அக். 20- போதை தரும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யும் மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. உரிய மருந்து சீட்டு இல்லாமல், போதை தரக்கூடிய மருந்துகள் சமீபகாலமாக விற்கப்படுவதாக புகார் எழுந்து வந்தது. இந்த விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காகவும், மருத்துவரின் உரிய பரிந்துரைச் சீட்டு இல்லாமலும், விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்வது, மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதி 1945இன் படி விதிமீறலாகும். அவ்வாறு விதிமீறல்கள் கண்டறியப் படும் மருந்துக் கடைகளின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும், போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருந்து உரிமம் இல்லாத நபர்களுக்கு விற்பனை அல்லது விநியோகம் செய்யும் மொத்த மருந்து விற்பனையாளர்க ளின் மருந்து உரிமங்களும் ரத்து செய்யப்படும் என்றும் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் வலுவிழந்த பாஜக கூட்டணி
புதுதில்லி, அக்.20- மகாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், சிபிஎம் பெரும் முன்னேற்றம் கண்ட நிலையில், பாஜக-ஷிண்டே பிரிவு சிவசேனா கூட்டணி பின்னடைவை சந்தித்தது. தேர்தல் நடந்த 1165 பஞ்சாயத்துகளில் 352 பஞ்சாயத்துகளில் மட்டுமே இரு கட்சிகளும் பெரும்பான்மை பெற்றன. 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் சிபிஎம் தனித்து பொறுப்புக்கு வந்த நிலையில், என்சிபி, உத்தவ் அணி சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி 457 பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை. சிவசேனாவை பிளவுபடுத்தி மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்த பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வி பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கட்சி வாரியான நிலைகள் பின்வருமாறு: பாஜக- 239, ஷிண்டே பிரிவு சிவசேனா-- 113, என்சிபி-- 155, உத்தவ் பிரிவு சிவசேனா- 153, காங்கிரஸ்- 149. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்- 115.
கல்விக்கு என்ன செய்தார் போல்சானாரோ? பிரேசில் மாணவர்கள் கேள்வி
பிரேசிலியா, அக்.20- தனது பதவிக்காலத்தில் எத்தனை கல்வி நிலையங்களை ஜனாதிபதி போல்சானாரோ உருவாக்கினார் என்று பிரேசில் மாணவர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அக்டோபர் மாதத் துவக்கத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் 46 கோடி அமெரிக்க டாலரை போல்சானா ரோவின் நிர்வாகம் வெட்டிவிட் டது. தேர்தல் நேரத்தில் கூட கல்வித்துறையை சீர்குலைக்கும் நட வடிக்கையை எடுக்கும் போல்சா னாரோவின் செயல்பாடுகளை எதிர்த்து மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள பெரிய நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. தேசிய மாணவர்கள் சங்கத்தின் தலைவரான புருனா பிரெலாஸ், ‘‘கல்வியில் அக்கறை செலுத்தும் ஜனாதிபதியே எங்களுக்குத் தேவை. லூலா ஜனாதிபதியாக இருந்த போது 181 கல்லூரி வளாகங்களை உரு வாக்கினார். எவ்வளவு கல்வி நிலை யங்களை போல்சானாரோ உரு வாக்கினார்?. ஒன்றன் பின் ஒன்றாகக் கல்வி நிலையங்கள் நிதி நெருக்கடி யால் சிரமப்படுகின்றன. கல்வியை மேம்படுத்த இந்த நிர்வாகத்திடம் எந்த விதமான திட்டமும் இல்லை’’ என்று குற்றம்சாட்டினார். மாணவர்களின் போராட்டம் அரசி யலாகவும் மாறியுள்ளது. இது போன்ற நிதி ஒதுக்கீடுகளை வெட்டு வதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று மாணவர்கள் சங்கங்களின் தலைவர்கள் கோரியுள்ளனர். அக்டோ பர் 30-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இரண்டாவது சுற்றுத் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லூலாவுக்கு ஆதரவாக மாணவர்கள் வாக்களிப்பா ர்கள் என்று மாணவர் சங்கங்களின் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.