states

img

அம்மா!

பில்கிஸ் பானுவும் அம்மாதான். தன் கண்முன்னே தன் மூன்று வயதுக் குழந்தையை மூர்க்கர்கள் பாறையில் முகத்தை மோதி சிதறடித்ததைப் பார்த்த அம்மா. பில்கிஸ் பானுவிற்கும் ஒரு அம்மா இருந்தாள் மிருகங்களால் சிதைக்கப்பட்ட  மகளைப் பெற்ற அம்மா. அந்தப் பதினோரு பேரையும் பெற்றவர்கள் அம்மாக்கள்தான். கொஞ்சமும் வெட்கமின்றி மிருக குணத்திற்காக பெருமைப் பட்டுக்கொள்பவர்களின் அம்மாக்கள். நரோடா பாட்டியாவில் உயிரோடு கொளுத்தப்பட்டவர்களில் அம்மாக்களும் அம்மாக்களின் குழந்தைகளும் அம்மாக்களின் அம்மாக்களும் இருந்தார்கள். அவர்களை டயர் குவித்து தீமூட்டி கொன்றவர்களுக்கும் கொல்லத் தூண்டியவர்களுக்கும் கொன்றவர்களைப் பாதுகாத்தவர்களுக்கும் அவர்கள் கொலையாளிகள் அல்ல என்று சொன்னவர்களுக்கும் அம்மாக்கள் உண்டுதான். ஆம்! கொலையாளிகளுக்கும் அம்மாக்கள் இருக்கிறார்கள் கொல்லப்பட்டவர்களுக்கும் அம்மாக்கள் இருக்கிறார்கள்.