states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

இங்கிலாந்து நாட்டின் 2-வது பெரிய நகர மான பர்மிங்ஹாம் திவால் ஆனதாக அறி விக்கப்பட்டுள்ளது. இந்த திவால் அறிவிப்புக்கு போதிய வருமானம் மற்றும் சம ஊதிய திட்டமே காரணம் என பர்மிங்ஹாம் கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. 

நீலகிரி மாவட்டம் எமரால்டு அணை கரை பகுதியில் மர்மமான நிலையில் 2 புலிகள் உயிரிழந்தன.

ரூ.2,000 நோட்டு திரும்பப் பெறப்பட்டதால் வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட பணக் கையிருப்பு விகித கட்டுப்பாடுகள், படிப்படியாகத் தளர்த்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.சேலம் மாவட்டம் செங்காட்டூரில் செங்கல் சூளைக்காக குழி தோண்டி தேக்கி வைக்கப் பட்ட நீரில் மூழ்கி இருவர்  உயிரிழந்தனர். ஏற்காடு மத்தூர் கிராமத்தில் இருந்து உறவினர் வீட்டுக்கு வந்த அண்ணன், தம்பி பலியாகிய நிலையில், செங்காட்டூர் பகுதி சோகத்தில் மூழ்கியது.

வார விடுமுறை நாட்களில் 100 ரூபாயில் நாள் முழுவதும் பயணம் செய்யும் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

திரிபுரா மாநிலம் தர்மநகர் பகுதியில் ரிக்டர் அளவில் 4.4 அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்கள் 8 பேர் #பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து அஜித் பவார் பாஜக கூட்டணிக்கு சென்ற நிலையில், கட்சியின் பெயர், சின்னம், கட்சியின் கட்டுப்பாடு தொடர்பான உரிமை கோரல் விவகாரத்தில், சரத்பவார் தரப்பும், அஜித் பவார் தரப்பும் தீவிரம் காட்டாத நிலையில், “கட்சியில் பிளவு எதுவுமில்லை” என்று தேர்தல் ஆணையத்திடம் சரத்பவார் அணியினர் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

கர்நாடகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் உள்ளூர் மக்களும் கன்னட மொழியில்தான் சேவை வழங்க வேண்டும் என அரசாணை கொண்டு வர முடிவெடுத்துள்ளதாகவும், பல கிராமங்களில் உள்ள வங்கிகள் அதிகாரிகள் இந்தியில் பேசுவதால் அரசு இந்த முடிவெடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீக்கதிர் முக்கிய செய்திகள் 

ஆந்திராவில் வன்முறை

ஆந்திராவில் வன்முறை ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்குதேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தான் முதல்வராக இருந்த 2014 முதல் 2017  வரையிலான காலகட்டத்தில் திறன் மேம் பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல் செய்ததாக 4 ஆண்டுகளுக்கு முன் வழக்கு  தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சனிக்கிழமையன்று  அதிகாலை நந்தியாலாவில் சந்திரபாபு நாயுடுவை சிஐடி  போலீசார் கைது செய்தனர். அவருடன் தெலுங்குதேச  சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கண்ட ஸ்ரீநிவாச ராவும் கைது செய்யப்பட்டார்.  சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து தெலுங்குதேச கட்சி  தொண்டர்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் பேருந்து,  கடைகளை உடைத்து, சாலைகளில் டயர்களை தீவைத்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் ஆந்திராவில் பொது  போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. 

பாஜக போராட்டத்தை கலைத்த தேனீக்கள்
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக எம்.பி. முனிசாமி தலைமை யில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தொடங்கிய சில நிமி டங்களில், அங்கு மரத்தில் இருந்த  தேனீக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை கொட்டத் தொடங்கின. தேனீக்  களின் இந்த திடீர் தாக்குதலால், போராட்  டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் ஆளுக்  கொரு பக்கமாக சிதறி ஓடத்தொடங்கி னர். பாஜகவினர் ஓடினாலும் தேனீக்கள்  துரத்தி துரத்தி கொட்டியது. தேனீக்களின்  தாக்குதலில் பாஜக எம்பி முனிசாமி  உள்  ளிட்ட பலர் காயமடைந்த நிலையில், அரு கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட னர்.