செப்டம்பர் 3 1967. ஸ்வீடன். வாகனங் களை வலப்பக்கம் ஓட்டவேண்டும் என்று புதிய சட்டம் வந்தது. இதில் இருந்துதான் எல்லாம் தொடங்கியது. இது அன்றிரவு அமலிற்கு வந்தது. ஆனால் ஸ்டாக்ஹோமில் சாலை ஒருங்கிணைப்பை மாற்ற வார இறுதி வரை அணைத்துப் போக்குவரத்தும் நிறுத்தப் பட்டது. இதனால் நகரக் காற்று தூய்மையடைந் தது. சூழல் உற்சாகம் வானளாவ உயர்ந்தது. அப்போது இச்சிறிய தீப்பொறி உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை யாரும் உணரவில்லை.
பிறந்தது மாசுத் தடுப்பு சட்டம்
மூன்று மாதங்களுக்குப் பிறகு காற்று மாசுத் தடுப்பு சட்டத்தை ஸ்வீடன் கொண்டுவந்தது. ஐநாவை உலகின் முதல் சர்வதேச சூழல் மாநாடு கூட்டுமாறு அழைப்பு விடுத்தது. ஜூன் 5 1972ல் ஸ்டாக்ஹோம் நகரில் முன்பு சிறை மற்றும் தியேட்டராக இருந்த ஃபோக்கெட்ஸ் ஹூஸ் (FolketsHus) என்ற இடத்தில் பூமியின் முதல் சூழல் மாநாடு கூடியது. இதன் ஐம்ப தாவது ஆண்டு வரும் வாரம் கொண்டாடப் படுகிறது. 1972ல் அப்போது புதிதாக உணரப்பட்டி ருந்த சூழல் பிரச்சனைகளை ஒப்புக்கொண்டு உலகளாவிய ரீதியில் அவற்றிற்குத் தீர்வு காண நீண்ட மெதுவான போராட்டம் தொடங் கியது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அதே மாதத்தில் ரியோ மாநாடு நடந்தது. இதில் கடைசி மாநாடு 2021ல் க்ளாஸ்கோவில் நடந்தது.
வழுக்குப்பாறையின் வழியே ஒரு சவாலான பயணம்
ரியோவில் தொடங்கி இன்றுவரை சூழலைக் காக்கும் பணி வழுக்குப் பாறையில் நடப்பது போல என்று உலகின் மிக நீண்ட கால சூழல் செய்தியாளர் ஜெஃப்ரி லீன் (Geoffrey Lean) கூறுகிறார். 1960களில் சூழல் பிரச்சனைகள் உள்ளூர்ப் பிரச்சனை யாகவே கருதப்பட்டன. பிரிட்டனில் 1962ல் இலண்டன் புகை விபத்து 750 பேரைக் கொன்றது. நான் காண்டிற்குப் பிறகு வேல்ஸ் அபர்ஃபேன் (Aberfan) நகரில் நிலக்கரி சுரங்கத்தில் கெட்டுப்போன கரியால் விபத்து நடந்தது. ஜப்பானில் காற்று மாசிலிருந்து தப்ப மக்கள் முகமூடி அணிந்தனர். ஆப்பிரிக்கா வின் சஹெல் (Sahel) பகுதியில் வறட்சி தாண்டவமாடியது. 1969ல் ஓடிக்கொண்டி ருந்த ஒரு இரயிலில் இருந்து சிந்திய எண்ணை தீப்பற்றி அமெரிக்கா ஒஹாயோ கயஹோகா (Cuyahoga) நதியில் கொட்டியது. நதி தீப்பிடித்து எரிந்தது.
அறுபதுகளும் எழுபதுகளும்
இக்காலகட்டத்தில் சூழலால் ஏற்படும் அழிவுகளை எதிர்த்துக் குரல்கள் எழும்பின. 1961ல் புகழ்பெற்ற டெய்லி மிரர் செய்தித் தாள் உலக வன நிதியம் (WWF) தோற்றுவிக்கப் பட்டதை ‘Doomed’ என்ற முதல் பக்கத் தலைப்பு செய்தியுடன் கொண்டாடியது. தொடர்ந்து ரேய்ச்சல் கார்சனின் “நிசப்த வசந்தம்” (Silent Spring) நூல் அதீதமான கண்மூடித்தனமான பூச்சிக்கொல்லி பயன்பாட்டிற்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்தியது. 1969ல் இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவராக இருந்த சார்ல்ஸ் இளவரசர் பின் லாந்து தூதரகத்தில் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் ஹெரால்டு வில்சனை எதிர்த்து அட்லாண்டிக் சால்மன் மீன்களுக்காக குரல் கொடுத்தார். வலிமை வாய்ந்த தொழிற்துறை இந்த எதிர்ப்புகளை மறுத்தது. புறக் கணித்தது. வளர்ச்சி என்ற பெயரில் மீண்டும் ஒரு இருண்ட காலத்தை படைக்க விரும்பியது.
கவர்ச்சியான கம்யூனிஸ்ட்
அன்றைய விவசாயத்துறை செயலாளர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்வைட் ஐசனோவருக்கு (Dwight Eisenhower) எழுதிய கடிதத்தில் “கார்சன் திருமண மாகாதவர். கவரும் ஆற்றல் உடையவராக இருந்தாலும் அவர் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருக்கலாம்” என்று எழுதினார். ஸ்டாக்ஹோம் மாநாடு ஸ்வீடன் தொடர்பான ஒரு சிறிய கூட்டம் என்றே முதலில் உலக நாடுகள் அலட்சி யப்படுத்தின. இரண்டு ஆண்டு விடாமுயற்சி யின் பலனாக யு கே,பிரான்ஸின் எதிர்ப்பு களுக்கு நடுவில் மாநாட்டை ஐநா அங்கீ கரித்தது. 1970 ஏப்ரலில் 20,000 பேர் பங்கேற்ற முதல் புவிநாள் ஊர்வலம் அமெரிக்காவை அதிரச் செய்தது. அன்றைய ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸனின் சூழல் பிரிவு தலைவர் அதை ஒரு ஹிஸ்டீரியா நிகழ்வு என்று நக்கலடித்தார். நிக்சன் மூன்றாண்டுகள் வரை தன் காங்கிரஸ் சொற்பொழிவில் இதற்காக 25 சதவீத நேரத்தை செலவிட்டார். ஆனால் நிலைமை மாறியது. 14 புதிய சூழல் பாதுகாப்பு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 1970ல் பிரிட்டனில் பதவிக்கு வந்த டெட் ஹீத் உலகின் முன்னோடி அரசு அமைச்சகங்களில் ஒன்றான சூழல் அமைச்சகத்தை ஏற்படுத்தினார்.
வளரும் நாடுகள் கவலை
இந்த போக்கு வளரும் நாடுகளிடையில் பணக்கார நாடுகள் தங்கள் வளர்ச்சிக்கு அளிக்கும் நிதியுதவியை நிறுத்திவிடும் என்று அஞ்சின. இதனால் பிரேசில் ஸ்டாக்ஹோம் மாநாட்டை “பணக்காரர்களின் கூட்டம்” (A richman’s show) என்றது. தாதுக்கள், புதைபடிவ எரிபொருட்கள் விரைவில் தீர்ந்துவிடும் என்று கூறப்பட்ட நிலையில், 30 யு கே விஞ்ஞானிகள் வெளியிட்ட “நீடித்த வளர்ச்சிக்கான ப்ளூ பிரிண்ட்” என்ற புத்தகத்தில் தீரா ஆற்றல் மூலங்களின் அவசியத்தை வலியுறுத்தினர். ஸ்டாக்ஹோம் மாநாடு 109 அம்ச தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன் பிறகு இருபதாண்டுகளுக்கு இது போல ஒரு சூழல் மாநாடு நடக்கவில்லை. ஈகோ (Eco) என்ற பெயரில் மாநாட்டு முடிவுகள் செய்தியாக வெளியிடப்பட்டன. கடல்சார் மாசுபடுதல், அழியும் நிலை உயிரினங்கள், உலகப் பாரம்பரியம், அமிலமழை, திமிங்கல வேட்டை மற்றும் ஓசோன் வாயுமண்டல அரிப்புத் தடுப்பு போன்ற பல பிரச்சனைகளில் சர்வதேச உடன்படிக்கைகள் ஏற்பட்டன.
தேனீ வளர்ப்பவர்கள்
பிரபல பொருளாதார நிபுணர் பார்பரா வார்டு, அன்றைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி ஆகியோரின் கருத்தின்படி வறுமையே உலகின் மிகப்பெரிய சூழல் பிரச்சனை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. பசுமை அமைதி இயக்கம், சர்வதேச தேனீ வளர்ப்போர் சங்கம் உட்பட 258 பிரதிநிதிகள் 1972 மாநாட்டில் கலந்துகொண்டனர். 1973ல் உருவான எண்ணை நெருக்கடி சூழல் பிரச்சனையாக தோன்றியது. ஆனால் பிறகு இது பொருளாதாரப் பிரச்சனையாக திசை திருப்பப்பட்டது. அரசியல் லாபத்திற்காக நிக்சன் நிர்வாகம் சூழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தது. இது மீண்டும் சூழல் பிரச்சனையை பின்னுக்குத் தள்ளியது. முன்பு சூழலிற்கு முரண்பாடானது என்று கருதப்பட்ட பொருளாதாரம் இன்று சூழலுடன் இணைந்ததே என்று உணரப்பட் டுள்ளது. முதலாளித்துவத்தின் பழைய மாதிரி இன்று செல்லுபடியாகாது என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. பசுமை வழியில் செல்வதும், வட்டப் பொருளாதாரமுமே பூமியைக் காக்க உதவும். டிலாய்ட் (Deloitte) அமைப்பின் சமீபத்திய ஆய்வு சுழிநிலை கார்பன் உமிழ்வினால் வரும் ஐம்பதாண்டில் உலகப் பொருளாதாரம் $43 டிரில்லியன் அளவு பயனடையும் என்கிறது. கிளாஸ்கோ மாநாடு எதிர்பார்த்த பலனை ஏற்படுத்தவில்லை என்றாலும் வரும் நவம்பரில் எகிப்து அல்மல் ஷேக் காப் 27 மாநாடு நல்ல முடிவுகளைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையுடன் உலகம் காத்திருக்கிறது. ஏற்கனவே காலதாமதமாகிவிட்டது. 1967ல் சூழலுக்காக எடுத்துவைக்கப்பட்ட முதல் காலடி இன்று பூமியில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்லது. ஆனால் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டி யிருக்கிறது. சூழல் சீரழிவு என்ற தவறான பாதையில் இருந்து உலகம் சூழல் பாதுகாப்பு என்ற சரியான பாதையில் பயணம் தொடரட்டும்.