ஒரு கிலோ சிஎன்ஜி எரிவாயுவுக்கு 100 கிமீ தூரம் ஓடும் புதிய மோட்டார் சைக்கிளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ப்ரீடம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிளில் சிஎன்ஜி, பெட்ரோல் இரண்டையும் பயன்படுத்தலாம். 2 கிலோ சிஎன்ஜி வாயுவும் தனியே 2 லிட்டர் பெட்ரோலும் நிரப்பும் டேங்க் வசதியுடன் ப்ரீடம் மோட்டார் சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம டைந்துள்ள நிலையில், முன்னெச்ச ரிக்கை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது உள்ளிட்ட பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கேரளாவின் முக்கிய நகரங்களில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 30 பேர் கொண்ட 9 குழுக்கள் முகாமிட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
பாலியல் வழக்கு தொடர்பாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஜூலை 15 அன்று ஆஜராகுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் சிறையில் இருந்தும் வெற்றி பெற்ற அம்ரித் பால் சிங் (பஞ்சாப்) மற்றும் ஷேக் அப்துல் ரஷீத் (லடாக்) வெள்ளி யன்று பரோல் மூலம் மக்களவை உறுப்பினர்க ளாக பதவியேற்றுக் கொண்டனர்.
மதுபான கொள்கை முறைகேடு பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவா லின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க சிபிஐக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023 அக்டோபர் 17இல் தன் பாலின திரு மணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தொடர்ந்த மனு ஜூலை 10 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கிறது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய விளையாட்டு வீரர்களு டன், பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.