சென்னை, மே 5- விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்கள் தமிழ் நாடு அரசின் ஊக்கத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை திட்டம் (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுக் கள் மட்டும் அதிகபட்சம் 25 நபர்கள் வரை, அதிக பட்சம் உதவித் தொகை ஓர் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை)கடந்த 2-ஆண்டுக ளில் ஒரு முறையாவது உலக தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். அல்லது கடந்த 2 ஆண்டு காலங்களில் ஒலிம்பிக் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும்.
பன்னாட்டு அளவி லான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (அதிகபட்சம் 75 நபர்கள், 10 மாற்றுத்திறனாளிகள் உட்பட அதிகபட்சம் உதவித் தொகை ஓர் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை) அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி களில் தங்கப்பதக்கம் வென்றி ருக்க வேண்டும். ஒலிம்பிக், ஆசிய விளை யாட்டு போட்டி, காமன்வெல்த் போட்டியில் தனிநபர் விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றிருக்க வேண்டும். வெற்றியாளர்கள் மேம்பாட்டுத்திட்டம் (அதிக பட்சம் 100 நபர்கள், 10 மாற்றுத் திறனாளிகள் உட்பட மற்றும் அதிகபட்சம் உதவித் தொகை ஓர் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை) அரசு, அரசால் அங்கீகரிக்கப் பட்டுள்ள விளையாட்டு அமைப்பு களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர்கள் மட்டும். இந்த திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளை யாட்டு வீரர் மற்றும் வீராங்கனை கள் தங்களது விண்ணப்பங் களை வருகிற 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையம் 95140 00777 மற்றும் 78258 83865 என்ற எண்களை, அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.