states

விமான நிலையத்தில் சமஸ்கிருதத்தில் அறிவிப்புகள்

நாட்டிலேயே முதன்முறை யாக, உத்தரப்பிரதேச மாநி லம் வாரணாசி விமான நிலையத்தில் சமஸ்கிருதத்தில் அறிவிப்புகள் வெளி யிடும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. வாரணாசியின் பாபத்பூரி லுள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இதற்கு முன்பு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் அறிவிப்புகள் வெளியாகி வந்த நிலையில், புதிதாக சமஸ்கிருதம் திணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வார ணாசி விமான நிலைய இயக்குநரான ஆர்யமா சன்யால் பேட்டி ஒன்றை  அளித்துள்ளார். அதில், “வாரணாசியின்  சிறப்புக்கு உரியது சமஸ்கிருத மொழி. இம்மொழியில் அறிவிப்புகளை கேட்கும் பயணிகள் தாம் சமஸ்கிரு தத்தின் தலைநகருக்கு வந்தது போல்  உணர்வார்கள்” என்று குறிப்பிட்டுள் ளார். எனினும், சமஸ்கிருதத்தில் அறி விப்பு வெளியிடுவதால் என்ன பயன்? சமஸ்கிருதத்தில் வெளியாகும் அறி விப்புகளை எத்தனை பேர் புரிந்து கொள்கிறார்கள்? என்று அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.