states

ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் தன்னிச்சையாக செயல்பட நடவடிக்கை

சென்னை,செப்.13- தமிழ்நாடு மாநில ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தன்னிச்சையாக தொடர்ந்து செயல்பட அரசு  தரப்பில் அனைத்து நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்படும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், “தலைவர், துணை தலைவர், நான்கு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் செயலாளர் (முழு பொறுப்பு) ஆகியோர்களைக் கொண்ட தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உருவாக்கப்பட்டு 13.10.2021 முதல் செயல்பாட்டில் உள்ளது” என்று கூறியுள்ளார். ஆணையம் மேலும் சிறப்பாக செயல்படும் வகையில் புதிதாக 48 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பணியிடங்களுக்கான நிதியும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, ‘ஒரு துணைச் செய லாளர், ஒரு சார்புச் செயலர், ஒரு  கணக்கு அலுவலர், இரண்டு பிரிவு  அலுவலர், இரண்டு கோர்ட் மாஸ்டர், நான்கு உதவி பிரிவு  அலுவலர், நான்கு தனிச்செயலா ளர், நான்கு நேர்முக உதவி யாளர்கள். இரண்டு எழுத்தர், இரண்டு உதவியாளர். இரண்டு தட்டச்சர், ஒரு பதிவுறு எழுத்தர் ஆகிய பணி யிடங்கள் பணி மாறுதல் மூலமும்,  ஒரு கணிப்பொறி இயக்குபவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படை யிலும், ஆறு ஓட்டுநர், 11 அலுவலக உதவியாளர், இரண்டு இரவு காவலர் மற்றும் இரண்டு தூய்மைப்பணியாளர் ஆகிய பணியிடங்கள் பணியாளர் முகமை மூலமாகவும் ஆக மொத் தம் 48 பணியிடங்கள் நிரப்பப்படும்’  எனவும் கூறிய அவர், இதற்கான ஆணைய நிர்வாகச் செலவாக ஆண்டுக்கு ரூபாய் 2 கோடியே 30 லட்சமும், மற்றும் பணியாளர் ஊதியத்திற்கு ரூபாய் 1 கோடியே 80 லட்சமும் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளார்.

;