சென்னை, செப்.5- மும்பையை தலைமையிடமாக வைத்து ஆகாசா ஏர் விமான நிறுவனம் மும்பை, அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு புதிய விமான சேவை களை தொடங்கி உள்ளது. அந்த நிறு வனம் தற்போது சென்னையையும் மையமாக வைத்து அதிகமான உள்நாட்டு விமான சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது. சென்னையிலிருந்து பெங்களூ ருக்கு தற்போது தினமும் 9 விமானங்க ளும், பெங்களூருலிருந்து சென்னைக்கு 9 விமானங்களுமாக ஒரு நாளுக்கு 18 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இனிமேல் 22 விமான சேவைகளாக அதிகரிக்கின்றன. இதனால் பயணி களுக்கு கூடுதல் விமான சேவை வசதி கள் கிடைக்கும். இதேபோல் இந்த மாதம் 15 ஆம் தேதியிலிருந்து மாலை 6:10 மணிக்கு மும்பையிலிருந்து புறப்படும் ஆகாசா ஏர் விமானம் இரவு 7:55 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது. அதன் பின்பு அதே விமானம் மீண்டும் இரவு 8:50 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு,
இரவு 10:45 மணிக்கு மும்பை சென்றடைகிறது. இதுவரை சென்னை மும்பை இடையே 19 புறப்பாடு விமானங்கள்,19 வருகை விமானங்கள் மொத்தம் 38 விமா னங்கள் உள்ளன. அது இனிமேல் 40 விமானங்களாக அதிகரிக்கப்படு கிறது. இதேபோல் சென்னையிலிருந்து மைசூருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மட்டும் ஒரு புறப்பாடு, ஒரு வருகை இரு சேவை களை இயக்கி வருகிறது. சென்னை-மைசூரு, மைசூரு-சென்னை இடையே பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், தற்போது அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் புதிதாக சென்னை- மைசூரு-சென்னை இடையே விமான சேவைகளை தொடங்கி உள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலை யத்தில் விமான சேவைகள் அதிகரித்துள் ளது பயணிகளிடையே மிகுந்த வர வேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையே சென்னையிலிருந்து மும்பை, தில்லி, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்க ளுக்கு விமான கட்டணம் வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது. சென்னையில் இருந்து மும்பைக்கு ரூ.9ஆயிரம், பெங்க ளூரு ரூ.6.500, தில்லி ரூ.9500, கொல்கத்தா ரூ.8 ஆயிரம் கட்டணமாக உள்ளது. இதேபோல் சென்னையி லிருந்து மதுரை, கோவை, தூத்துக்குடிக்கு ரூ.6 ஆயிரம் வரை விமான கட்டணமாக இருக்கிறது.