states

img

கே.பாலகிருஷ்ணன் - செயலாளர் சிபிஐ(எம்) தமிழ் மாநிலக்குழு

வாழ்த்துச் செய்தி'

  மண் சார்ந்தும், மரபு சார்ந்தும், மதம் சார்ந்தும் ஏராளமான விழாக்கள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றன. மனிதகுலம் விவசாயத்தை ஒரு தொழிலாக மேற்கொள்ளத் துவங்கிய நிலையில், விளைபொருட்கள் மட்டுமல்ல பல்வேறு விழாக்களும் விளைந்தன. அத்தகைய விழாக்களில் ஒன்றுதான் மலையாள மொழி பேசுகிற மக்கள் கொண்டாடுகிற ஓணம் திருநாளாகும். இந்த இனிய நாளில் உலகம் முழுவதுமுள்ள மலையாள மொழி பேசுகிற சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுவின் சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மலையாள மொழிபேசும் சகோதர சகோதரிகளின் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வகையில் தீக்கதிர் நாளேடு சிறப்பிதழ் வெளியிடுவது பாராட்டத்தக்கது. இந்த முயற்சிக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

;