சென்னை, அக்.6- “நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியேற்பு குறித்து உயர் நீதிமன்றம் பிறப் பித்துள்ள உத்தரவைக்கூட அறிந்துகொள்ள முயற்சிக்காமல் தமிழக அரசின் மீது ஆளுநர் திட்டமிட்டு அவதூறு செய்து வருவது மிகுந்த வேதனைக்குரியது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,525 ஊராட்சிகளில் 4,357 இடங்கள் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலை வர் பதவி மட்டுமே நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் காரணமாக அங்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் பொறுப்பேற்க இயலாத நிலை இருந்தது. நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர்
மாதம் 7-ஆம் தேதி உத்தரவில் போட்டி யின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஒதுக் கப்பட்ட இடத்துக்குரிய பிரிவைச் சேர்ந்தவராக இந்நபர் இல்லை என்று இந்த நீதிமன்றம் கரு துகிற காரணத்தால் சம்பந்தப்பட்ட நபர் பொ றுப்பேற்கக் கூடாது என்று தெளிவாக்குகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததால் ஊராட்சி மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறுப்பை ஏற்க இயலாத நிலை ஏற்பட்டது. திமுக அரசின் சமூகநீதிக் கொள்கை, பாஜ கவையும், அதன் அமைப்புகளையும் தமிழ் மண்ணுக்குள் செல்வாக்குப் பெற முடியாமல் தடுத்து வைத்திருக்கிறதே என்ற ஆதங்கம் தான் ஆளுநர் இப்படி பேசக் காரணமே தவிர, பட்டியலின-பழங்குடியின மக்கள் மீது அவ ருக்கு இருக்கும் அக்கறை இல்லை. அரசியல் பேச வேண்டும் என்றால் “அரசியல் தலைவராக” தன்னை மாற்றிக் கொண்டு தாராள மாக ஆளுநர் தன் கருத்தைத் தெரிவிக்கட்டும். ஆளுநர் உண்மைக்கு மாறான பேச்சுகளைத் தவிர்த்து, மாநில சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களிலும், அரசு நிர்வா கத்தின் கோப்புகளிலும், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற அவர்கள் தொடர்பான லஞ்ச வழக்குகளில் கையொப்ப மிடாமல் வைத்துள்ள கோப்புகளிலும் கையெழுத்துப் போடுவதில் தனது நேரத்தை உருப்படியாகச் செலவிட்டு, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் ஆக்கப் பூர்வமாக செயல்பட வேண்டும்.