states

கால்பந்து வீராங்கனைக்கு தவறான சிகிச்சையா ? அமைச்சர் விளக்கம்

சென்னை,நவ.11- சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் கால்பந்து வீராங்கனைக்கு தவறான சிகிச்சை அளிக்கப் பட்டதால் கால் இழப்பு ஏற்பட்டது என்று தவறான பிரச்சாரம்  செய்யப்படுவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ப தற்காக சிங்கப்பூர் சென்ற தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெள்ளியன்று (நவ.11 ) சென்னை விமான நிலையம் வந்த டைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் நூற்றுக்கு  மேற்பட்ட நாடுகளில் இருந்து மருத்துவ ஆராய்ச்சி யாளர்கள், மருத்துவப் பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் உட்பட பல்வேறு நிபுணர்கள் கலந்து கொண்டு சுகாதார நடவடிக்கைகள் குறித்து பேசினர். இந்த மாநாட்டில் பேரிடர் கால தடுப்பு நடவடிக்கைகள், தொற்று நோய்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும், பல்வேறு வைரஸ் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தின் கருத்துகளும் எடுத்துச் சொல்லப்பட்டது.

பேரிடர், புதிய வைரஸ் போன்றவைகள் பரவும் சூழ்நிலை யில் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.  தமிழகத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு  தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொசு மருந்து அடித்தல், புகை அடித்தல் போன்றவைகள் செய்யப்பட்டு வருகின்றன.  பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட கால்பந்து  வீராங்கனை மாணவிக்கு சரியான மருத்துவ சிகிச்சை  தான் அளிக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக தான்  சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு,  அனுப்பி வைத்ததாக மருத்துவமனை அதிகாரிகள் என்னிடம் கூறினர்.  அரசு மருத்துவமனைகளில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், தவறான சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டதாக கருத்துக் களை பரப்புகின்றனர். இது சரியானது அல்ல. மருத்து வர்கள் ஆத்மார்த்தமாகத்தான் பணியாற்றுவார்கள். யாரையும் பாதிக்கும் விதத்தில் பணியாற்ற மாட்டார்கள்.  இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகாரையும் ஒதுக்கி தள்ளாமல், அதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்  கூறினார்.