states

பைக் ஷோ ரூமில் பயங்கர தீ 8 பேர் பலி

ஹைதராபாத்,செப்.13- தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பாஸ்போர்ட் அலுவலகம் அருகில்  எலக் ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் உள் ளது.இங்கு திங்கள்கிழமை யன்று இரவு 10 மணியளவில்  தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தளங்களில் ரூபி ஹோட்டல் என்னும் தங்கும் விடுதி இயங்கி வரு கிறது. இதில் 25 பேர் தங்கி யிருந்துள்ளனர். தீயணைப்புத் துறை யினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஹைதராபாத் காவல் ஆணையர் சி.வி. ஆனந்த் கூறுகையில் “காவல்துறை யினரின்  முதல்கட்ட விசார ணையில், தரைதளத்தில் இருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூமின் சார்ஜிங்க் யூனி ட்டில் ஏற்பட்ட ஷாட் சர்க்கியூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஷோரூ மிற்கு மேலே இருந்த ஹோ ட்டலுக்கும் தீ வேகமாக பரவி உள்ளது. அங்கு 8 பேர் மூச்சு திணறி இறந்துள்ளனர். மற்ற வர்கள் மாடியில் இருந்து குதித்துள்ளனர். இதனால் பலர் காயமடைந்து உள்ளூர் மக்களின் உதவியுடன் மருத் துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் பெரும் பாலானவர்கள் வெளிமாநி லத்தைச் சேர்ந்தவர்கள்” என்று தெரிவித்தார்.தீ விபத் துக்கான காரணத்தை கண்ட றிய விசாரணைக்கு  உத்தர விடப்பட்டுள்ளது. 

;