சென்னை,அக்.19- சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட ஆவின் பொது மேலாளர் கள் மற்றும் துணைப் பதிவாளா்களு டனான ஆய்வுக் கூட்டம் பால்வளத் துறை -கதர் துறை அமைச்சா் ஆா். எஸ்.ராஜ கண்ணப்பன் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத கிராமங்களில் புதிய சங்கங்க ளை உருவாக்குவது, சங்க உறுப்பி னர்களுக்கு கறவை மாடுகள் வாங்கு வதற்கு கடன் வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். மேலும், பேரிடர் மற்றும் மழைக் காலங்களில் பொதுமக்களுக்கு தடை யின்றி பால் விநியோகம் செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். தீபாவளியை முன்னிட்டு ஆவின் சார்பில் காஜூ பிஸ்தா ரோல், காஜு கட்லி, நெய் பாதுஷா, முந்திரி அல்வா, மிக்சர், முறுக்கு உள்ளிட்ட 6 சிறப்பு பலகாரங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. விற்பனை அதிகரிக்க முடிவு! பண்டிகை காலங்களில் பொது மக்களுக்கு தேவைக்கேற்ப இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டை விட நிகழாண்டில் தீபாவளி விற்ப னையை 20 விழுக்காடு அதிகரிக்க வும், அனைத்து அரசு மற்றும் தனி யார் நிறுவனங்களுக்கு தேவையான தீபாவளி இனிப்புகளை வழங்கவும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் கால்நடை பரா மரிப்பு, பால்வள துறை முதன்மைச் செயலர் சத்யபிரதா சாகு, பால் வளத்துறை இயக்குநா் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநா் சு.வினீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.