states

ரூ.50 கோடிக்கு ஆவின் இனிப்பு விற்பனை

சென்னை,அக்.15-  தீபாவளிக்கு ஆவின் இனிப்பு கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு விறு விறுப்பாக விற்பனை நடந்து வருகிறது. அரசு  துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவ னங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்க ஆவின் இனிப்புகளை வாங்கி வருகின்றனர். ரூ.200 கோடிக்கு ஆவின் இனிப்புகள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை ரூ.50 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாக  இயக்குநர் சுப்பையா கூறியிருப் பதாவது:- தமிழகம் முழுவதும் ஆவின்  இனிப்பு விற்பனை சூடுபிடித்துள் ளது. பொது மக்கள் மற்றும் நிறுவனங்கள் அதிகளவில் ஆர்டர்  கொடுத்து வருகிறார்கள். சென்னை யில் 27 இடங்களில் ஆவின் இனிப்பு கள் வாங்க முன்பதிவு செய்யலாம். ஆவின் பார்லர்களிலும் வாங்க லாம்.  பொதுமக்கள் ஆவின் இனிப்பு களை வாங்கி தீபாவளியை கொண்டாட ஆவின் பால் பாக் கெட்டுகளில் தொடர்பு எண்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இனிப்பு தேவைப் படுபவர்கள் அந்த எண்க ளில் தொடர்பு கொண்டால் வழங்கு வதற்கான ஏற்பாடு செய்யப்படும். ஆவின் அனைத்து பால் பாக் கெட்டுகளிலும் தீபாவளி இனிப்பிற்கான விவரங்களை தெரிவிக்கப் பட்டுள்ளன. சிகப்பு நிற பால் பாக்கெட் அதிக உற்பத்தி  செய்வதாகவும், ஆரஞ்சு பாக்கெட்  குறைவாக வினியோகம் செய்வ தாகவும் கூறுவது தவறான தகவல்.  பொதுமக்கள் விருப்பத்திற்கேற்ப 6 வகையான ஆவின் பாக்கெட் சென்னையில் வழங்கப்படுகிறது. ஆரஞ்சு பாக்கெட் தினமும் 4 லட்சம் தயாரிக்கப்படுகிறது. சிகப்பு நிற ஆவின் பால் பாக்கெட் 15 ஆயிரம் வினியோகிக்கப்படுகிறது. ஆரஞ்சு உற்பத்தியை குறைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.