states

5 பேர் ஊருக்குள் நுழைய தடை

தென்காசி  மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தலித் மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த விவகாரம் தொடர்பாக கடை உரிமையாளரான மகேஸ்வரன் மற்றும் ராமச்சந்திரன், குமார், சுதா, முருகன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இந்நிலையில் அவர்கள் 5 பேரும் 20ஆம் தேதி முதல் சம்பந்தப்பட்ட பாஞ்சாங்குளம் ஊருக்குள் 6 மாத காலத்திற்கு நுழைய தடை விதித்து ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பத்மநாபன், வழக்குப்பதிவு செய்யப்பட்ட 5 பேரும், 6 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

;