பெரம்பலூர்,ஆக.27-
கடந்த அதிமுக ஆட்சி யின்போது 2019-2020 ஆம் ஆண்டில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம்மலையாளப்பட்டி ஊராட்சியில் மஞ்சனப் பாறை ஓடை, காந்தி நகர் கூட்டு மருதை ஓடை, கொட்டாரக் குன்று முருகன் கோவில் ஓடை ஆகிய மூன்று ஓடை களில் 45 தடுப்பணைகள் கட்ட அனுமதி அளிக்கப்பட் டது. ஆனால் 6 இடங்களில் மட்டுமே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது.
இதில் முறைகேடு நடந் துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சமூக தணிக்கை செய்ததில் 6 தடுப்பணைகள் மட்டுமே கட்டி விட்டு 45 தடுப்பணைகள் கட்டி முடிக் கப்பட்டதாக கூறி அரசு நிதி ரூ.30.03 லட்சம் முறை கேடாக பயன்படுத்தியது தெரியவந்தது. அப்போது வேப்பந்தட்டை ஒன்றி யத்தில் ஓவர்சீயராக இருந்த மணிவண்ணன்(52), இள நிலை பொறியாளர் நாக ராஜன்(56), வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன்(55) மற்றும் தனியார் ஒப்பந்த தாரர்களான மலையாள பட்டி துரைசாமி(63), தழு தாழையை சேர்ந்த ராணி (56), சதீஷ்குமார்(39), வெற்றிவேல்(45) என 7 பேர் மீது பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு ஆய் வாளர் ராமேஸ்வரி வழக் குப்பதிவு செய்தார்.