states

பணம் பறிக்கும் நீட், ஜேஇஇ பயிற்சி மையங்கள்!

ஜெய்ப்பூர், ஆக. 19 -  ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் செயல்படும் நீட், ஜேஇஇ நுழைவு தேர்வு பயிற்சி மையங்கள் நாடு தழுவிய அள வில் பிரபலமானவை. பல்வேறு மாநி லங்களை சேர்ந்த மாணவர்கள், இங்கு தங்கி நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சி பெறுகின்றனர். நுழைவுத் தேர்வில் வெற்றிப் பெறு வதற்காக பலமணிநேரம் தொடர்ந்து படிக்க வேண்டியுள்ளதால் மன உளைச்ச லுக்கு உள்ளாகும் மாணவர்கள் தற்கொ லை செய்து கொள்வதும் இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் கோட்டா மாவட்டத்தில் நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்ற 22  மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த 18 நாட்களில் 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இதையடுத்து, மாணவர்களின் தற்கொலையைத் தடுப்பது குறித்து,

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. அப்போது,  நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் தொடர்பான தனது விமர்சனத்தையும் கூட்டத்தில் அவர் முன்வைத்தார். “9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாண வர்களை, நுழைவு தேர்வு பயிற்சி நிறு வனங்களில் சேர்ப்பதால், அது அவர் களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்து கிறது. போலி பயிற்சி மையங்களிலும் சேர் ந்து மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தங்களது பள்ளிகளுக்குச் செல்வதில்லை. அவர்களின் பாடங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, நுழை வுத் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். மாணவர்கள் இரட்டைச் சுமை சுமைக் கின்றனர். இளம் மாணவர்கள் தற்கொ லை செய்து கொள்வதை இனியும் பொறுத் துக் கொள்ள முடியாது. இந்த ஆண்டு மட்டும் கோட்டா பகுதியில் தற்கொலை செய்துகொண்ட 21 மாணவர்களில் 14 பேர் குறிப்பிட்ட கோச்சிங் நிறுவனத்தில் படித்தவர்களாக உள்ளனர்” என்றார்.  தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, கடந்த 2021-ஆம் ஆண்டில் மட்டும், நாடு முழுவதும் சுமார் 13 ஆயிரம் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,834 பேர், மத்தியப் பிரதேசத்தில் 1,308 பேர், தமிழ்நாட்டில் 1,246 பேர், கர்நாடகாவில் 855 பேர், ஒடிசாவில் 834 பேர், ராஜஸ்தானில் 633 பேர் என மாணவர்களின் தற்கொலைகள் நடந்துள்ளன.