states

img

விவசாயிகள் “டெல்லி சலோ” போராட்ட ஆவணப்படத்தை திரையிட மறுத்த ஒன்றிய அமைச்சகம்! - கி.ஜெயபாலன், புதுக்கோட்டை

இந்திய திரைப்பட விழாக்களின் இயக்ககம் (Directorate of Film Festivals) என்பது ஒன்றிய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் 1973 இல் அமைக்கப்பட்டது. நம் நாட்டுத் திரைப்படங்களை வெளிநாடுகளில் நடக்கும் திரைப்பட விழாக்களில் பங்கு பெறச் செய்வதற்கும்; வெளிநாட்டு திரைப்பட நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுவதற்குமான ஏற்பாடுகளை இந்த அமைப்பு செய்து கொண்டு வருகிறது. இதன் மேற்பார்வையிலேயே ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உலகத் திரைப்பட விழாக்கள் நடைபெறுகின்றன. ஆண்டின் துவக்கத்தில் கோவா பின்பு மும்பை, திருவனந்தபுரம், சென்னை, கொல்கத்தா, புனே உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் நடக்கும் உலகத் திரைப்பட விழாக்கள் இறுதியாக பெங்களூருவில் நடைபெறும்.

இந்த வரிசையில், 15 ஆவது பெங்களூரு உலகத் திரைப்பட விழாவை, இந்தாண்டு பிப்ரவரி 29 இல் கர்நாடக  முதலமைச்சர் சித்தாராமையா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். 60 நாடுகளைச் சேர்ந்த 180 திரைப்படங்கள்;13 திரை யரங்குகளில், மார்ச் 7வரை திரையிடப்பட்டன. முதல்வரின் துவக்க உரையில், “உலகில் வாழும் பலதரப்பட்ட பண்பாட்டு கலாச்சாரங்களைக் கொண்ட மக்களின் வாழ்வியலை தெரிந்து கொள்ளவும்; சமூ கத்தில் மனிதத்தை மேலும் தழைத்தோங்க வைக்கவும் இத்திரைப்படவிழாக்கள் உதவுகிறது.மேலும் டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் வாழ்வையும், அவரது மக்க ளுக்கான அர்ப்பணிப்பு மிக்க உழைப்பையும் கன்ன டத்தில் படமெடுப்பவர்களுக்கு அரசு பேருதவி புரியும்”  என்று அறிவித்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  புகழ்பெற்ற கன்னட இயக்குநர் கேசரி கரவூ,2020-21 இல் ஒன்றிய அரசின் மூன்று கருப்பு வேளாண் சட்டங்  களை எதிர்த்து விவசாயிகள் டில்லியில் நடத்திய போராட்டங்களை, “கிசான் சத்தியகிரகா” என்ற பெயரில் ஆவணப் படம் எடுத்துள்ளார்.இப்படம் விழாவில் திரை யிடப்பட இருந்தது. இந்நிலையில்,ஒன்றிய செய்தி மற்றும்  ஒலிபரப்புத்துறை அமைச்சகம் இப்படத்தை திரையிட மறுத்துள்ளது என்ற செய்தி விழாவில் அதிர்ச்சியை ஏற்  படுத்தியது.

“இந்த ஆவணப்படத்தின் உள்ளடக்கம் உணர்ச்சி வயப்படுத்தும் செயலாக(Sensitive matter) உள்ளது”  என்ற சொத்தை வாதத்தை இயக்ககம் முன் வைத்தது.  “இந்த ஆவணப்படம் உலகளவில் நடந்த நான்கு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. ஒயிட் யுனிகார்ன் உலகத் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்  படத்திற்கான விருதும் பெற்றுள்ளது. ஆனால் இந்தியா வில் பிஜேபி அரசு தடை செய்துள்ளது”என இப்பட இயக்கு நர் வருத்தம் தெரிவித்தார்.  ஒன்றிய அரசின் கருத்துச் சுதந்திர மறுப்போடும்; காலத்தின் அவசியத்தை உணர்ந்து, அண்ணல் அம்பேத்கர் வாழ்வை கன்னடத்தில் கலைப்படைப்பாக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் ஆவலோடும் விழா துவங்கியது. விழாவின் துவக்கப்படமாக, போன்ஜோர் ஸ்விட்சர்லாந்து (“Bonjour Switzerland”) என்ற 2023ல்  வெளியான ஸ்விஸ் படம் திரையிடப்பட்டது. 60%ஜெர்மன்,  17% பிரஞ்சு, 20% இத்தாலி உள்ளிட்ட மொழிகள் பேசப்படும் ஸ்விட்சர்லாந்தில், பிரெஞ்ச் என்ற ஒற்றை  மொழி மட்டுமே மக்கள் பேச, எழுத வேண்டும் என்று  அரசு திடீரென முடிவெடுக்கும் போது ஏற்படும் பிரச்சனை களையும், இம்முடிவு பைத்தியக்காரத்தனமானது என்பதையும் இப்படம் நையாண்டியாகச் சொல்கிறது. ஒன்றிய பிஜேபி அரசின், ஒரே நாடு, ஒரே மொழி என்ற  இந்துத்துவா கொள்கையை இந்தியாவில் அமல்படுத்தி னால் ஏற்படக்கூடிய விளைவுகளை இப்படம் நினை வூட்டியது.  இங்கிலாந்து இயக்குநர் கென்லோச்-சின் ஐடேனி யல் பிளாக்கி (“I Daniel Blake”), சாரி வீ மிஸ்டு யூ  (“Sorry we missed you”) வரிசையில் தற்போது வந்துள்ள  தி ஓல்டு ஓக் (“The Old Oak”) என்ற படம், பார்வையா ளர்களை நெகிழ்ச்சியில் இருக்கைகளிலேயே உறைய வைத்தது. இங்கிலாந்தின் வடகிழக்கில் உள்ள கிராமத்தில் மூடப்பட்ட சுரங்கத் தொழிற்சாலையின் மிச்சங்களாக விரக்தியில் வாழுகின்றனர் வயதான உள்ளூர் தொழி லாளிகள். பிழைப்புத் தேடி வாலிபர்கள் கிராமத்தை விட்டு  வெளியேறியதால் குறைந்த வாடகையில் வீடுகள் இங்கு  கிடைக்கிறது. இதனால் அரசு,சிரியன் அகதிகளை  இப்பகுதியில் குடியமர்த்துகிறது.உள்ளூர்வாசிகள் இவர்களை வெறுக்கிறார்கள். குறிப்பாக, அகதி தாரா  குடும்பத்தைப் பல வழிகளில் அவமானப்படுத்து கிறார்கள். அப்பகுதியில் “தி ஓல்டு ஓக்”என்ற மது விடுதி  நடத்தும் பாலன்டைன் என்பவர் தாராவுடன் இணைந்து  இவ்வெறுப்புணர்வை வேரறுத்து மனிதநேயத்தை எப்படி  வளர்க்கிறார் என்பதை இப்படம் நெகிழவைக்கும் விதத்தில் பேசுகிறது.

 டேமேஜ் (Damage) என்ற படம், விசா இன்றி அமெ ரிக்காவில் தங்கியுள்ள இராக் முஸ்லிம் ஓட்டுநரின் வாட கைக் காரில்,பயணிக்கும் 88 வயது பெண்மணிக்கும் ஓட்டுநருக்குமான உரையாடலின் வழியாக,அகதிகளின் மன வலியையும்,வாரிசுகளால் புறக்கணிக்கப்பட்ட முதிய  தாயின் வலியையும் மிக நுட்பமாக நமக்கு கடத்துகிறது.இப்படத்தின் இயக்குநர் மாடலியீன் ப்ளாக்வெல் திரையிட லின் போது, பார்வையாளர்களோடு உரையாடியது சிறப்பு.  நாம் அன்றாட வாழ்வில் அரசு அலுவலகங்களுக்கோ, தொழில் நிமித்தமாக பிற நிறுவனங்களுக்கோ, ஏதோ ஒரு காரியத்திற்காக செல்லும் போது, எதிர்கொள்ளும் கேள்விகள் பல நம்மை கோபமூட்டும். நாம் விரும்பாத கேள்விகள் முன் வைக்கப்படும். காரியம் ஆவதற்காக கோபத்தை அடக்கிக் கொண்டு பொறுமையாக பதில் கூற முயற்சிப்போம். ஆனால் தொடுக்கப்படும் தொடர் கேள்விகளில் நமது கொள்கை சார்ந்த விஷயங்கள் மழுங்கடிக்கப்படுவதை நமது காரியம் ஆவதற்காக ஏற்போம். சில சமயங்களில் காரியம் கைகூடாவிடினும், தன்மானத்திற்காக வெளியேறுவோம். இதனை ஆறு வெவ்வேறு நிகழ்வுகளில், கேள்வி கேட்பவரின் குரலை யும், பதில் சொல்பவரின் உடல்மொழியையும் காட்சி யாக்கி,இயந்திரகதியான ஆளும் வர்க்கத்தின் அதி கார திமிரை கேட்பவரின் கேணத்தனமான கேள்விகள் மூலம் உணர வைத்த அற்புதமான படம் டெரஸ்ட்ரியல் வெர்சஸ் (Terrestrial Versus) என்ற ஈரான் படம். 

வாழ்வில் நாம் நினைப்பது ஒன்று; நடப்பது ஒன்று.  காலம் அதன் போக்கிலேயே வாழ்க்கையை இழுத்துச்  செல்கிறது என்பதை சிறப்பாக டோல் (Toll) என்ற பிரேசில்  படம் முன்வைக்கிறது.தாயின் ஆசை மகனை, தன்பாலின  விருப்பிலிருந்து மீட்டு சாதாரண ஆண் மகனாக மாற்ற  நினைக்கிறாள். ஆனால் காலம், அவளது ஆசையை நிரா சையாக்குகிறது என்பதை வலியோடு உணர்த்துகிறது. உயிருக்கும்,உடைமைக்கும் உலகில் எங்குமே பாது காப்பு இல்லை என்ற கருத்தை சிறப்பாக பேசி உள்ளது,  பிளாகாஸ் லெசன்ஸ் (“Blaga’s lessons”) என்ற  பல்கேரிய நாட்டு படம். மேற்காசியாவில் மனித உயிரைப்  பறிக்கும் மத வெறியிலிருந்து தப்பிக்க ஐரோப்பாதான் பாதுகாப்பானது எனக்கருதி,அதை நோக்கி ஓடும் அகதி கள் ஒரு புறம்.ஆனால்,ஐரோப்பாவில், பணத்திற்காக உயிர் உடைமைகளை பறிக்கும் நிலையையும்; அங்கே யுள்ள பாதுகாப்பற்ற சூழலையும்;உள்ளூர் வரலாற்று பின்புலத்தோடு சிறப்பாக பேசுகிறது.   ஸ்வீட் ட்ரீம்ஸ் (Sweet Dreams) என்ற படம், இந்தோ னேசியாவை,நெதர்லாந்து காலனியாதிக்கம் செய்த போது, ஏற்பட்ட கரும்பு விவசாயிகளின் போராட்டம்; டச்சு குடும்பத்தில் வேலை பார்க்கும் இந்தோனேசியா பெண்ணின் காதல்; இரண்டின் ஊடாகப் பேசுகிறது. ட்ரீமெர் (Dreamer) என்ற பிரெஞ்சு நாட்டு படம் சிலை வடிவமைக்கும் கோடீஸ்வர பெண் கலைஞரின் பண்ணை வீட்டில் வேலைபார்க்கும் விகாரமான, வய தான ஒற்றை கண் ஆசாமியின் காதலை நுட்பமாக முன்  நிறுத்துகிறது.  பாரடைஸ் இன் பர்னிங் (Paradise in burning)  என்ற ஸ்வீடன் நாட்டு படம்,தாய் திடீரென இறக்‌க, ஆத ரவற்ற நிலைக்குச் செல்லும் மூன்று பெண் குழந்தை களின், அன்பைத் தேடும் மனதை காட்டுகிறது. அந்த அன்பை எல்லையற்ற சுதந்திரத்தின் மூலம் அடைய விரும்புகிறார்கள்.இதற்காக சமூக கட்டுக்களை மீறி; பூட்டிய வீட்டில் புகுந்து திருடி தின்பது; உடைகளை உடுத்துவது; அங்குள்ள வயதானவர்களிடம் அன்பை  தேடுவது;போதையின் மூலம் விடுதலைக்கு விழைவது; போன்ற சமூக சட்டகத்துக்குள் அடங்காத வாழ்வை நுணுக்கமாகப் பேசுகிறது இப்படம்.

மி கேப்டன் (“Me Captain”) இத்தாலியர் இயக்கிய  படம்.அரசியல் ஸ்திரத்தன்மையற்ற ஆப்பிரிக்க மண்ணில் வேலைவாய்பற்ற இரு ஏழை வாலிபர்கள், பெருங்கனவோடு ஐரோப்பாவில் குடியேற நினைக்கி றார்கள்.அதற்காக குறுக்கு வழியை கையாண்டு,சகாரா பாலையை கடந்து,சக ஆப்பிரிக்க மனித கடத்தல் மாஃபியாக்களிடம் சிக்கி,சிதறி அவர்கள் படும் சொல்லெண்ணாத் துயரங்களை எதார்த்தமாக பதிவு செய்துள்ளது. உள்நாட்டுப் போர் மேகங்களால் பாதிக்கப்பட்ட மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து உயிர்  தப்பித்து ஐரோப்பாவிற்கு அகதிகளாக தஞ்சமடை கின்றவர்களின்  பண்பாட்டு கலாச்சார கலப்பு, அங்குள்ள பள்ளி மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனை எதிர்கொள்ளும் ஆசிரியர்களின் போராட் டங்களை, பல தளங்களில் விவரிக்கின்ற அருமையான படங்கள் திரையிடப் பட்டன.அதில் முக்கியமான பெல்ஜியப் படம் அமல் (“Amal”); ஜெர்மன் படம் தி  டீச்சர்ஸ் லோங்கே (“The Teachers Lounge”) மற்றும்  இறுதி படமாகத் திரையிடப்பட்ட ஹங்கேரி படம்வித்அவுட்  ஏர் (“Without Air”) உள்ளிட்ட படங்கள், மனித உணர்வு களை மேன்மைபடுத்தும் கலை சார்ந்த படங்களாக அமைந்திருந்தன.

 திரையிடல் தவிர்த்து, *திரைக்கதை மற்றும் படத்தயா ரிப்பில் செயற்கை நுண்ணறிவின் பாதிப்புகள்: *இந்திய சினிமாவும்;அரசியலமைப்பு மதிப்பும்: *படத்தொகுப்பு என்னும் கலை, *பாலின உணர்வுதிறன் பற்றிய அமர்வு, *கன்னட சினிமாவின் 90வது ஆண்டு, *அறிவார்ந்த ஒழுங்குக்குள் திரைப்படங்களை புரிந்து கொள்வதில் விமர்சகர்களின் பங்கு, *மிருணாள்சென்-நூற்றாண்டு நினைவு கருத்தரங்கம், *இசை வழியிலான அரசியல், *சமகாலத்திய ஆவணப்படங்கள் போன்ற பல தலைப்புகளில் வல்லுநர்களின் அமர்வுகள் பார்வை யாளர்களின் பங்கேற்போடு சிறப்பாக நடந்தேறின. மனிதநேயத்தை மழுங்கடிக்கும் இன்றைய அடை யாள அரசியல் சூழலில், மனித குலம் சிறக்க, சக மனி தர்கள் மீது அன்பைச் செலுத்துவதும்; இவற்றிற்கு தடை யான அரசியலை எதிர்த்து தொடர்ந்து போராடுவதுமே தீர்வென இத்தகைய உலகத் திரைப்பட விழாக்கள் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகின்றன.