சென்னை, ஜூன் 1- ஜூன் 23 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டிருப்பதால் அதற்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1 அன்று தொடங்கி யது. 83 முகாம்களில் இந்த பணி நடை பெறுகிறது. 8 லட்சத்து 37 ஆயிரம் மாணவர்களின் விடைத்தாள்களை 76 ஆயிரம் ஆசிரியர், ஆசிரியைகள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள் ளனர். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் 87 முகாம்களில் 87 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் மிகுந்த கவனத்து டன் ஈடுபட வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடு களை அரசு தேர்வுத்துறை விதித்துள்ளது. இதற்காக கையேடு வெளியிடப்பட்டு விடைத் தாள் முகாம் அலுவலருக்கு வழங்கப்பட் டுள்ளது. ஒவ்வொருவருக்கும் என்னென்ன பணிகள் என்பதை பிரித்து கொடுக்கப்பட் டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு பொது வான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மதிப்பீட்டு எண் மிக முக்கியமாக மற்றும் இன்றியமையாத பணியாகும். மைய மதிப்பீட்டு பணியில் ஒவ்வொரு வேலை யும் சுமூகமாகவும், சரியாகவும் மற்றும் கடும் மந்த தன்மையுடன் மேற்கொள்ளப்படு கிறதா என்பதை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. முகாமில் நடைபெறும் எந்தவொரு குளறுபடிகளுக்கும் முகாம் அலுவலரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.