states

அரசுப் பள்ளிகளுக்கு கூடுதலாக 7,200 புதிய வகுப்பறைகள்!

அன்றாடம் வேலைக்குச் செல்லும் பெண்கள், சிறு வியாபாரம் செய்யக்  கூடிய தாய்மார்கள் உள்ளிட்டோர்  கட்டணமில்லாப் பேருந்துகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், இதுவரை சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம்  மகளிருக்கு சேமிப்பாக மாறியுள்ளது. இதனை அரசு தனது வருமான இழப்பாகக் கருதவில்லை. மகளிர் மேம்பாட்டுக்கான வளர்ச்சித் திட்ட மாகவே கருதுகிறது. பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில், போக்கு வரத்துக் கழகங்களை மேம்படுத்த ரூ.500 கோடியில் 1,000 புதிய பேருந்து களை வாங்க அரசு முடிவெடுத்துள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித் தார்.

சென்னை,அக்.19- தமிழ்நாடு சட்டப்பேரவை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், பேரவை விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை  வாசித்தார். அதில், அரசுப் பள்ளிகளின்  கட்டமைப்புகளை வலுப்படுத்துவ தற்கு சுமார் 26 ஆயிரம் புதிய வகுப்பறை களும், 7500 கி.மீட்டர் சுற்றுச்சுவரும், பராமரிப்பு பணிகளுக்கென சுமார் 2  ஆயிரத்து ரூ. 200 கோடி நிதியென  மொத்தம் சுமார் 12 ஆயிரத்து 300 கோடி  ரூபாய் தேவை என்பது கண்டறி யப்பட்டு அவற்றை படிப்படியாக ஏற்படுத்தி தர ‘பேராசிரியர் அன்பழகன்  கல்வி மேம்பாட்டுத் திட்டம்’ என அறிவிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 15  லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில்  கூடுதலாக சேர்ந்துள்ளனர். எனவே  அதிகரித்துவரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய  வகுப்பறைகளுக்கான தேவைகள்  உயர்ந்துள்ளதால், கூடுதலான வகுப் பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களுக்கு சுமார் ரூ.800 கோடியில் 6,000 புதிய வகுப்பறைகள், உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார்  ரூ.280 கோடியில் 1200 வகுப்பறைகள் என மொத்தம் ரூ.1050 கோடியில் 7200 வகுப்பறைகள் நடப்பாண்டிலேயே கூடுதலாக கட்டப்படும்” என்றார்.

ரூ.2 ஆயிரத்து 200 கோடியில் சாலைகள் சீரமைப்பு

தமிழ்நாட்டில் உள்ள 649 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில், 55 ஆயி ரத்து 567 கி.மீ. நீளமுள்ள சாலை கள் அமைந்துள்ளன. இவற்றில், 6 ஆயிரத்து 45 கி.மீ நீளமுள்ள சாலை கள், ஏற்கனவே செயல்படுத்தப் பட்டுள்ள பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் மற்றும் குடிநீர் குழாய்  பணிகள் போன்றவற்றால் சேதமடைந் துள்ளன. மேலும், 2016-2017  ஆம் ஆண்டிற்கு பின்பு மேம்படுத்தப் படாமல் பழுதடைந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீளச் சாலைகள் உள்ளன. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பழுதடைந்த சாலைகள் விரைவில் மேம்படுத்தப்படும். இதற்காக, தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியாக, நடப்பு நிதியாண்டில் ரூ. 2 ஆயிரத்து 200 கோடி வழங்கப்பட்டு, 4 ஆயிரத்து 600 கி.மீ நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும்.  இதுதவிர, சிங்காரச் சென்னை 2.0, மாநில நிதிக் குழு மானிய திட்ட நிதி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நபார்டு வங்கி நிதி உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து, 7 ஆயிரத்து 388 கோடியில் 16 ஆயிரத்து 390 கி.மீ. நீள முள்ள சாலைகளும் படிப்படியாக மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.