states

img

திரிபுராவில் வலுவான நிலையில் ‘இந்தியா’ கூட்டணி - இடது முன்னணி- காங்கிரசுக்கு சாதகம்

அகர்தலா, மார்ச் 20- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் இருமுனைப் போட்டி உருவாகியுள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் அணிக்கு சாதகமாக அரசியல் சூழல் மாறியிருக்கிறது. திரிபுராவில் கிழக்கு திரிபுரா மற்றும் மேற்கு திரிபுரா ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஏப்ரல் 19 மற்றும் 26 ஆம் தேதிகள் என்று இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. குறுகிய நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பிரச்சாரமும் தீவிரமடைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இடது முன்  னணி- காங்கிரஸ், பாஜக மற்றும்  திப்ரா மோதா என்று மும்முனைப்  போட்டி இருந்தது. ஆளும் பாஜக வுக்கு எதிரான வாக்குகளைப் பிரிப்  பதே திப்ரா மோதாவின் நோக்கம்  என்று இடது முன்னணி குற்றம் சாட்டியிருந்தது. அந்தக் குற்றச் சாட்டு உண்மைதான் என்பதை தற்போது பாஜகவும், திப்ரா மோதா வும் இணைந்திருப்பது காட்டுகிறது. சாதகம் பாஜகவும், திப்ரா மோதாவும் இணைந்திருப்பதால் பாஜகவுக்கு  எதிரான வாக்குகள் பிரியாமல் இடது முன்னணி-காங்கிரஸ் அணிக்குக் கிடைக்கும் என்று எதிர்  பார்க்கப்படுகிறது. கிழக்கு திரி புராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராஜேந்திர ரியாங்  அறிவிக்கப்பட்டுள்ளார். மேற்கு  திரிபுராவில் காங்கிரஸ் வேட்பாளர்  ஆஷிஷ் குமார் சாஹாவை இடது  முன்னணி ஆதரிக்கிறது.  இரண்டு தொகுதிகளிலும் பாஜக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. கிழக்கு திரிபுரா வில் திப்ரா மோதா கட்சியின் தலை வர் கிஷோர் தேப்பர்மாவின் சகோ தரி பாஜக வேட்பாளராகக் களம்  இறங்குகிறார். மேற்கு திரிபுரா தொகுதியில் முன்னாள் முதலமைச்  சர் பிப்லப் குமார் தேப் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். கடும் அதிருப்தி நிலவியதால் முத லமைச்சர் பதவியில் இருந்து அவர்  வெளியேறினார் என்பது குறிப்பிடத்  தக்கது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இரண்டு மக்களவை உறுப்பினர்கள் மீதும் கடும் அதிருப்தி நிலவுவதால் இரண்டு பேருக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.  மேலும் ராம்நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாள ராக ரத்தன் தாஸ் போட்டியிடு கிறார். இந்தத் தொகுதியில் வெறும் 897 வாக்குகள் வித்தியாசத்தில் தான் கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.