காஷ்மீர் வாலா இதழில் 2011 ஆண்டு வெளியான கட்டுரைக்காக, அதை எழுதிய அப்துல் ஆலா ஃபாசிலியை ஜம்மு காஷ்மீர் மாநில புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.
கடந்த நவம்பர் 6, 2011 தேதி வெளியான ‘தி ஷேக்கல்ஸ் ஆஃப் ஸ்லேவரி வில் பிரேக்’ என்ற தலைப்பில் மருந்தியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற அப்துல் ஆலா ஃபாசிலி கட்டுரை எழுதி இருந்தார். இவர் காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்த கட்டுரை ஆத்திரமூட்டும், தேசத்துரோகம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மையை உருவாக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்று கூறி தற்போதுஸ்ரீநகரில் உள்ள பாசிலின் வீடு மற்றும் காஷ்மீர் வாலா பத்திரிக்கையின் அலுவலகம், முதன்மை ஆசிரியர் ஃபகத் ஷா வின் வீடுகளிலும் காஷ்மீர் மாநில புலனாய் அமைப்பு சோதனை செய்துள்ளது. இந்த சோதனையில் கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் பிற டிஜிட்டல் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக எஸ்ஐஏ தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 4 தேதி கைது செய்யப்பட்ட ஃபகத் ஷா மீது மார்ச் 16 தேதி கடுமையான பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஷா மீது பதியப்பட்ட மூன்று வழக்குகளில் இரண்டில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அவர் தற்போது குப்வாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.