states

img

சத்தீஷ்காரில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி

சத்தீஷ்கார் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் நள்ளிரவு வாகனம் கவிழ்ந்த விபத்தில் சி.ஏ.எப் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் மற்றொரு வீர்ர பலத்த காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சி.ஏ.எப். அதிகாரி ஒருவர் கூறுகையில், நக்சல் பாதித்த பகுதியான சமாரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று இரவு முகாம் மாற்றும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், வீரர்கள் சென்ற வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 சி.ஏ.எப். வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.