states

img

ஷோபனா, டி.எம்.கிருஷ்ணா, பி.என்.உண்ணிக்கு சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் டி.லிட் பட்டம்

கொச்சி, ஜன.2- நடனக் கலைஞரும் நடிகையுமான ஷோபனா, செவ்வியல் இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, சமஸ்கிருத அறிஞர் என்.பி.உண்ணி ஆகியோருக்கு நவம்பர் 3 ஆம் தேதி டி லிட் விருது வழங்கும் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் முடிவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்ததாக முன்னாள் துணைவேந்தர் டாக்டர். தர்மராஜ் அடாட் கூறினார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், இவ்விவகாரத்தில் ஆளுநர் எந்தக் கருத்து வேறுபாடும் தெரிவிக்கவில்லை. ஆளுநருக்கு வசதியான தேதிக்காக பட்ட மளிப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.

இதில்  நடக்கும் விவாதத்துக்கு எந்த அடிப்படை யும் இல்லை என்றார்.  மதிப்புறு டி-லிட் பட்டம் வழங்கு வதற்கான முடிவு கல்வி கவுன்சிலால் எடுக்கப்படுகிறது. மூவருக்கும் மதிப்புறு டி லிட் வழங்க சிண்டிகேட்டின் பரிந்துரை கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டு சட்டப்படி தலைவராக இருக்கும் ஆளு நருக்கு அனுப்பப்பட்டது.  அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து, நவம்பர் 3ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். ஆளுநரின் முதன்மை செயலர் இதற்கான உத்தரவை பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைத்தார் எனவும் டாக்டர். தர்மராஜ் அடாட் கூறினார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாம் கோவிந்துக்கு மதிப்புறு முனை வர் பட்டம் வழங்க ஆளுநர் பரிந்துரைத்த தாகவும், அரசு தலையிட்டு தடுத்ததாகவும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா குற்றம் சாட்டினார்.  இதில் உண்மை இல்லை எனவும், மதிப்புறு முனைவர் பட்டம் யாருக்கு வழங்க  வேண்டும் என்பதை அதற்கான குழு தேர்வு செய்து சிண்டிக்கேட் அங்கீகரித்து ஆளு நரின் ஒப்புதலுக்கு அனுப்புவதுதான் வழக்கம். இப்போதும் அதுதான் நடந்தது. பல்கலைக்கழக சிண்டிகேட் தனி அதி காரம் படைத்த அமைப்பு. இதில் எந்த  இடத்திலும் அரசின் தலையீடு என்கிற பேச்சுக்கே இடம் இல்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.பிந்து தெரிவித்தார்.