கொச்சி, பிப். 8- நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசா ரிக்கும் அதிகாரிகளை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப்புக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. திலீப் தவிர சகோதரர் அனூப், சகோதரியின் கணவர் சூரஜ், உதவி யாளர் அப்பு, நண்பர்கள் பைஜு செங்கம நாடு, சரத் ஆகியோருக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டது. ஒற்றை அமர்வின் இந்த தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகவுள்ளது. உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பி.கோபிநாத் அமர்வு முன்பு அரசுத் தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாதங்கள் வெள்ளிக் கிழமை நிறைவடைந்தன. அரசுத் தரப்பு தாக்கல் செய்த வாதத்தின் மீது குற்றம்சாட்டப் பட்டோர் தங்களது எழுத்துப்பூர்வமான பதிலை சனிக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். நடிகையை கடத்தி தாக்குவதற்கு கூலிப்படையை நியமித்தது அரிதானது நிகழ்வு என்று அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குற்றவியல் சட்டம் இயற் றும் நேரத்தில் இப்படி ஒரு குற்றம் நடக்கும் என்று சட்டம் இயற்றியவர்கள் கூட நினைத் திருக்கமாட்டார்கள் என்று அரசுத் தரப்பு தலை மை இயக்குநர் டி.ஏ.ஷாஜி தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாகவும், ஜாமீன் வழங்கி னால், நீதிமன்றத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை குறையும் என்றும் டிஜிபி கூறி னார். பாலச்சந்திர குமாரின் தகவல்கள் நம்பக மானவை அல்ல என்று குற்றம்சாட்டப் பட்டோர் அளித்த பதிலில் தெரிவித்துள்ளனர்.