கோழிக்கோடு, மே 24- ஒன்றிய அரசு தனது தவறான பொருளா தாரக் கொள்கையை தொடர்கிறது என்பதற்கு ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவ டிக்கையே சாட்சி என்று முதல்வர் பினராயி விஜ யன் கூறினார். கேரள மாநில வணிகர்கள் மற்றும் தொழி லதிபர்கள் மாநில மாநாட்டின் பொது அமர்வை துவக்கி வைத்த முதல்வர் மேலும் கூறுகை யில், “தொலைநோக்குப் பார்வையுடனும் திட்ட மிடலுடனும் பொருளாதாரக் கொள்கையை ஒன்றிய அரசு செயல்படுத்தவில்லை. ஏழாண்டு களுக்குள் மீண்டும் ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது இதை தெளிவாக்குகிறது. பண மதிப்பு நீக்கம், தொற்றுநோய் போன்ற நெருக் கடிகளில் இருந்து மீண்டு வரும் வர்த்தகம் மற்றும் தொழில் துறையை அழிப்பதே ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை” என்றார். அவர் மேலும் பேசியதாவது: “ஒன்றிய அரசு பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படுத்துகையில், கேரளத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக வர்த்தகத் துறையை கேரள அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. தொழில்களுக்கு கேரளம் உகந்ததல்ல என்று சில உள்நோக்கம் கொண்டவர்கள் பிரச் சாரம் செய்கின்றனர். இது கேரளாவுக்கு எதி ரான பிரச்சாரம். கடந்த 2015-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு புழக் கத்தில் இருந்த 85 சதவிகித ரூபாய் நோட்டு களுக்கு தடை விதித்தது. இப்போது இரண்டா யிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட் டுள்ளன. இதன் காரணமாக 11 சதவிகித ரூபாய் நோட்டுகள் மறைந்துள்ளன. நாட்டில் புழக் கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை ஒன்றிய அரசு சீர்குலைத்து வருகிறது. இது வர்த்தகம் மற்றும் தொழில் துறையை மட்டுமின்றி ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும். கறுப்புப் பணம், ஊழல் மற்றும் பயங்கர வாதத்தைத் தடுக்க என்ற பெயரில் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூபாய் நோட்டுத் தடை அறிவிக்கப்பட்டது. ஆனால் இவை எதுவும் உண்மையாகவில்லை.
வர்த்தகர்கள் பொருளாதாரத்தின் முது கெலும்பு. ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கையால் வணிகத் துறையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டியை அறிவியல் பூர்வமாக அமல்படுத்தாதது வணிகர்களை யும் மோசமாக பாதித்துள்ளது. நிலைத்தன்மை யை குறிக்கோளாக கொண்ட தொழில்துறை மற்றும் வணிக நட்புச் சூழல் கேரளத்தில் உள்ளது. நாட்டின் பொதுத் துறைகள் மூடப்படும் நிலையில், இங்கு அவற்றை மாநில அரசு கையகப்படுத்துகிறது. உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் கேரளாவுக்கு வரு கின்றன. கதவடைப்பும் ஆட்குறைப்பும் இல் லாத வேலைக் கலாச்சாரம் இங்கு வளர்ந்து வருகிறது. கேரளா தொழில் தொடங்க ஏற்ற இடம். தொழில்முனைவோர் ஆண்டு மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய சிறு, குறு நிறுவனங்கள் இங்கு நிறுவப்பட்டன. இதை யெல்லாம், பொய் பிரச்சாரம் செய்வோர் கண்டு கொள்வதில்லை. தொழில் துறையில் நிலைத்தன்மையே அரசின் குறிக்கோள். மாறிவரும் சவால்களை எதிர்கொள்ள மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில்கள் காலத்துக்கேற்ப நவீனமயமாக்கப்படும். முதலீட்டை அதி கரிக்கவும், நிலையான வணிகச் சூழலை உரு வாக்கவும், தொழில் முனைவோரை வளர்ப்ப தையும் இடது ஜனநாயக முன்னணி அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறு முதல்வர் கூறினார். கூட்டத்திற்கு அமைப்பின் மாநில தலை வர் வி.கே.சி.மம்மதுகோயா தலைமை தாங்கி னார்.