திருவனந்தபுரம்,ஆக.20- கேரள அரசின் கே போன் திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதம் 4 லட்சம் இணைப்பு கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் சட்டசபை தொகுதியில் உள்ள 2000 பிபிஎல் குடும்பங்களுக்கு இலவச இணைப்பு என்ற இலக்கையும் எட்ட முடியும். முதற்கட்டமாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 100 ஏழை குடு்ம்பங்களுக்கு இலவச இணைப்புகள் வழங்குவது என்கிற இலக்கு ஒப்பந்ததாரர்களின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகி வந்தது. தற்போது அதுவும் நிறைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இணைய தொடர்பு இணைக்கப்படாமல் இருந்தவர்களின் தொலைபேசி எண் அடங்கிய பட்டியலை உள்ளாட்சித் துறையினர் ஒப்படைத்தனர். ஓணம் பண்டி கையை ஒட்டி இந்த இணைப்புகள் வழங்கப்படும். இலவச இணைப்பு ஒரு நாளைக்கு 20 எம்பிபிஎஸ் வேகத்தில் 1.5 ஜிபி டேட்டாவுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. 14,000 க்கும் மேற்பட்ட இணைப்புகளை விரைவாக முடிப்பதற்கு முன்னதாக, மாநிலம் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆபரேட்டர்கள் அடையாளம் காணப் பட்டுள்ளனர். திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் உள்ள 720 கேபிள் ஆபரேட்டர்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இணைப்பு வழங்கு வதில் வேண்டுமென்றே காலதாமதம் உள்ளதா மற்றும் கே ஃபோன் பெயரைக் கொடுத்து மற்ற இணைப்புகள் வழங்கப் படுகிறதா என்பது சரிபார்க்கப்படும். கே போன் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் பாபு கூறுகையில், ஒவ்வொரு சனிக்கிழமையும், இணைப்பின் முன்னேற்றத்தை மதிப்பிட ஆபரேட்டர் களுடன் ஒரு கூட்டம் அழைக்கப்படுகிறது. சிஏஜி தணிக்கை குறிப்புகள் தொடர்பான பல அறிக்கைகள் தவறானவை என்று கே போன் அதிகாரிகள் தெளிவுபடுத்தி யுள்ளனர். ஆய்வின் போது ஏஜிஸ் அலு வலக அதிகாரிகள் சிலர் இதுபோன்ற கருத்துகளை கூறுவது வழக்கம். தேவையான விளக்கங்கள் மற்றும் பதில்கள் வழங்கப்பட்டு சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.