states

img

கடற்படை ஹெலிகாப்டர் விபத்து ஒருவர் காயம்

கொச்சி, மார்ச் 26-  கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலை யத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்து ஏற் பட்டுள்ளது. ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது.  இந்திய கடலோர காவல் படையின் ஏஎல்எச் துருவ் மார்க் 3 ஹெலிகாப்டரில் விமானிகள் சோதனை மேற் கொண்டனர். அப்போது, 25 அடி உயரத்தில் ஹெலி காப்டர் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விழுந்து நொறுங்கியது. விபத்தி னால் ஒருவர் படுகாய மடைந்துள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.  இதனால், கேரளாவின் கொச்சி விமானநிலை யத்தின் ஓடுபாதை மூடப் பட்டு, இரண்டு சர்வதேச விமானங்கள் திருவனந்தபுரத் திற்கு திருப்பி விடப்பட்ட தாக அதிகாரிகள் தெரிவித்த னர்.