states

img

கூட்ட நெரிசலால் பயணிகள் மயக்கம்; ரயிலில் பொதுப் பெட்டிகளை அதிகரிக்க அமைச்சருக்கு ஜான் பிரிட்டாஸ் எம்.பி கடிதம்

திருவனந்தபுரம், அக்.17- கூட்ட நெரிசலால் பயணிகள் மயக்கம் அடையும் நிலையில், ரயில் களில் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி டாக்டர். ஜான் பிரிட்டாஸ் எம்.பி., மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். மற்ற ரயில் களை நீண்ட நேரம் நிறுத்திவிட்டு வந்தே பாரத் ரயில்கள் கடந்து செல்லும் நடைமுறையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். வட கேரளாவில் இயக்கப்படும் ரயில்களில் பொது பெட்டிகள் பற்றாக்குறையால், பயணிகள்  பெரும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். குறைந்த அளவிலான பொதுப் பெட்டிகளில் இப்போது பய ணிகள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்ற னர். கூட்ட நெரிசலில் ஏறி மிதித்து தான் பொதுப் பெட்டிகளுக்கு உள்ளே செல்ல முடியும். பெரும்பாலும் கதவிலும் படியிலும் தொங்கியபடியே பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

காற்றுப் புகாத அளவுக்கு பயணிகள் கூட்டம் அலைமோதும் நிலையில், பயணிகள் மயக்க மடைவது வாடிக்கையான காட்சியாகி விட்டது. ஆனாலும், ரயில்வே அதி காரிகள் இவற்றை கண்டுகொள்வ தாகவே இல்லை. வடகேரளாவில் இயக்கப்படும் ரயில்களில் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் மட்டுமே இதற்கு  முற்றுப்புள்ளி வைக்க முடியும். எனவே, விரைவில் ரயில்களில் பொ துப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜான் பிரிட்டாஸ் எம்.பி கேட்டுக் கொண்டுள்ளார். வந்தே பாரத்துக்காக மற்ற ரயில்களை நிறுத்தக் கூடாது மேலும், வந்தே பாரத் ரயில்களை சரியான நேரத்தில் இயக்குவதற்காக மற்ற ரயில்களை பல இடங்களில் நீண்ட நேரம் நிறுத்தி வைப்பது வழக்க மான காட்சியாகிவிட்டது. இதனால், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றுக்குச் செல்ல வேண்டிய வழக்கமான ரயில்களில் பயணிக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக வந்து செல்கின்றன. இதற்கு தீர்வு காண, வந்தே  பாரத் ரயில்களின் நேரத்தை மாற்றிய மைப்பதற்கு பதிலாக, மற்ற ரயில்களின் நேரத்தை மாற்ற ரயில்வே முயற்சித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, வந்தே பாரத் ரயில்களின்  கால அட்டவணையை பகுத்தறிவுடன் திருத்தவும், மற்ற ரயில்களின் தற்போதைய கால அட்டவணையை மாற்றாமல் வைத்திருக்கவும், மத்திய  ரயில்வே அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.