states

img

வரலாறு படைக்க கேரள சுற்றுப்பயணம்.... முதல்வர் பினராயி விஜயன் தொடங்கினார்....

திருவனந்தபுரம்:
புதிய கேரளத்தை மேலும் சிறப்பாக்குவதற்கான முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ‘கேரள சுற்றுப்பயணம்’ செவ்வாயன்று காலை கொல்லத்தில் தொடங்கியது. மாலையில் பத்தனம் திட்டாவிலும் அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மேற்கொள்ளும் முதல்வரின் சுற்றுப்பயணம் இம்மாதம் 30 ஆம் தேதி மாலை ஆலப்புழாயில் நிறைவடைய உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர், எல்டிஎப் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து விரிவான வளர்ச்சிக்கான பார்வையை உருவாக்கும். இதற்காகஅந்தந்த மாவட்டங்களின் முக்கிய பிரமுகர்களின் கருத்தை முதல்வர் நாடியுள்ளார். கேரளத்தின் எதிர்காலத்திற்கான எல்டிஎப் பார்வையை வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த சுற்றுப்பயணம். உள்ளாட்சித் தேர்தல்களில் கிடைத்த பெரும்மக்கள் ஆதரவைத் தொடர்ந்து இந்த சுற்றுப்பயணத்தை ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்ற கேரளம் தயாராகி வருகிறது.

சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி செவ்வாயன்று  காலை 10.30 மணிக்கு கொல்லம் பீச் ஆர்க்கிட் ஹோட்டலில் நடைபெற்றது. இவ் விழாவில் பிரபலங்கள் கலந்துகொண்டனர். பின்னர் முதல்வர் பதானம்திட்டாவுக்குச் சென்று மாலை 4.30 மணிக்கு அபான் கோபுரத்தில் பிரமுகர்களை சந்தித்தார். கோவிட் சூழ்நிலையில் பெரிய நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டன.முதல்வரின் சுற்றுப்பயணம் எல்டிஎப் மாநிலக் குழு முடிவின்படி திட்டமிடப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் வளங்களை யும் மேம்பாட்டு ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக அமைந்தது. மாநில அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை நிறைவு செய்வதன் முக்கியத்துவத்தை முதல்வர் விளக்கினார்.