states

img

வயநாடு மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வாரி வழங்கும் கேரள பள்ளிகள்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி, அட்டமலை, புஞ்சரி மட்டம் ஆகிய பகுதிகள் நிலச்சரிவால் மிக மோசமான அளவில் உருக்குலைந்துள்ளன. நிலச்சரிவில் சிக்கி உறவினர்களையும், வீடுகளையும் இழந்து இயல்பு வாழ்க்கையை தொலைத்து நிர்கதியாய் நிற்கும் மக்களுக்கு கேரள அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அதே போல சிபிஎம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்கள், திரைத்துறை கலைஞர்கள், தொழிலதிபர்களும் வயநாடு மக்களுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளும் வயநாடு மக்களுக்காக நிவாரணப் பொருட்களை வாரி வழங்கி வருகின்றன. (படம் : நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்காக நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கும் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி அருகே உள்ள எடகுளங்கரா பகுதியில் உள்ள ஷாஷாஜி பப்ளிக் பள்ளி)