states

img

‘சங்பரிவார் திட்டத்துடன் பல்கலை.களில் கால்வைக்க முடியாது’

கோழிக்கோடு - கேரளா பல்கலைக்கழகங்களின் செனட் நியமனத்தில் பல்கலைக் கழகம் வழங்கிய அறிவுறுத்தல் களை புறக்கணித்து, ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் பட்டியலின்படி ஒரு தலைப்பட்சமாக நியமனம் செய்யும் அணுகுமுறையை வேந்தர் மேற்கொள் கிறார் என்றும், சங்பரிவார் திட்டத்து டன் கேரள ஆளுநர் பல்கலைக்கழ கங்களில் கால்வைக்க முடியாது என்றும் இந்திய மாணவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் பி.எம்.அர்ஷா திரு வனந்தபுரத்தில் டிசம்பர் 12 செவ்வா யன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய  அம்சங்கள் :

கேரளாவில் பல்கலைக்கழ கத்தை சங்பரிவாரத்தின் மையமாக மாற்றினால், மிகக் கடுமையான போராட்டம் நடத்தப் படும். எந்தப் பல்கலைக்கழகத்தி லும் ஆளுநரை கால் பதிக்கவிட மாட்டோம். ஆளுநரால் அனைத்து விதமான விதிமுறைகளும் மீறப்படு கின்றன. கேரள பல்கலைக்கழக த்துக்கு 4 மாணவர்கள் பரிந்துரை க்கப்பட உள்ளனர்.

இது அறிவியல், மனிதநேயம், கலை, விளையாட்டு வகையைச் சேர்ந்தது. இதில், கேரளா பல் கலைக்கழகம் வழங்கிய மாணவர் களில் ஒருவர் பி.ஏ இசையில் முதல் நிலை பெற்றவரும் எம்.ஏ மாணவரு மாவார். இதுபோல், பி.ஏ.தத்துவம், பி.ஏ.வீணை, பி.எஸ்.டபிள்யூ.,  ஆகியவற்றில் முதல் தர வரிசை யாளர்களை பல்கலைக்கழகம் பரிந்துரைத்தது. நுண்கலையில் கடந்த ஆண்டுக்கான கலை மேதையும், விளையாட்டில் தேசிய அளவில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான ஒரு மாணவரை பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள் ளது. ஆனால் வேந்தர் இதை யெல் லாம் புறம்தள்ளிவிட்டு ஏபிவிபி எனப் படும் ஆர்எஸ்எஸ் மதவெறி மாண வர் அமைப்பின் தலைவர்களை நியமித்துள்ளார்.

4 ஏபிவிபி தலைவர்கள் வேந்த ரால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் களின் கல்வி திறனை அறிய தேர்வு முடிவுகள் வர வேண்டும். இதில் ஒருவரது தேர்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை. இரண்டாவது நபர் பெற்றுள்ளது பி கிரேடும் சி  கிரேடும். இன்னொருவருக்கு கலைத்துறையுடன் உள்ள தொடர்பு, கலைவிழாவில் பங்கேற்றுள்ளார் என்பது மட்டுமே. விளையாட்டில் பாடி பில்டர் என்பது ஆளுநர் குறிப்பிடும் மற்றொரு தகுதி. வேந்தரால் எந்த அளவுகோலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது? இந்த மாணவர்கள் பற்றிய தகவல்கள் வேந்தருக்கு எங்கிருந்து கிடைத்தன?

திருவனந்தபுரத்தில் இந்திய மாணவர் சங்கத் (எஸ்எப்ஐ) தலை வரின் தந்தையை கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிஎம்எஸ் தலைவரின் மனைவி, செனட் சபைக்கு ஆளுநரின் பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் 18 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதில் இருவரைத் தவிர மற்ற அனைவரும் வேந்தரால் முடிவு செய்யப்பட்டவர்கள் ..

எஸ்எப்ஐ போராட்டத்தின் நோக்கத்தை மக்களுக்கு தெரி விக்கத் தயங்கும் ஊடகங்களின் அணுகுமுறை சரியல்ல. உயர்கல்வியை பாதுகாக்கவே இந்த  போராட்டம். அநாகரிகமாக பேசியது இந்திய மாணவர் சங்கத்தினர் அல்ல, ஆளுநர்தான்.