கோழிக்கோடு, ஜூன் 28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் கேரள மாநில முன்னாள் அமைச்சருமான சிவதாச மேனன் செவ்வாயன்று பிற் பகல் கேரள மாநிலம் கோழிக் ்கோட்டில் உள்ள தனியார் மருத் துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90. 1932-ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத் தில் உள்ள மன்னார்க்காட்டில் பிறந்தவர் சிவ தாசமேனன். அங்குள்ள கேடிஎம் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கேரள மாநிலத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை திரட்டி சங்கம் அமைத்து கோரிக்கைகளுக்காகப் போராடியவர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி யில் இணைந்தார். 1977-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பணித்தது. இதை யடுத்து அவர் தமது ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்தார். சிவதாச மேனன் 1987 முதல் மலம்புழா சட்டமன்றத் தொகுதி யிலிருந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார். இ.கே.நாயனார் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசில் 1987- 1991 ஆண்டுகளில் மின்சாரம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சராகவும், 1996- 2001-ஆம் ஆண்டில் நிதி அமைச்சராகவும் செயலாற்றினார். மேலும் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர், பாலக்காடு மாவட்டச் செயலாளர் பொறுப்பு களை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.