ஆலப்புழா, ஜுன் 10- கேஎஸ்ஆர்டிசி கூரியர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஓராண்டில் ரூ.3.82 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. லாபம் சுமார் ஒரு கோடி ரூபாய்.
பயணச்சீட்டு அல்லாத வருவாயை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக, கேரளத்தில் உள்ள 45 பணிமனைகளையும், தமிழ கத்தில் உள்ள கோயம்புத்தூர் மற்றும் நாகர் கோவிலையும் இணைக்கும் வகையில் 2023 ஜூன் 15 அன்று தொடங்கப்பட்ட கூரியர் சேவையின் ஓராண்டு நிறைவையொட்டி கேரளம் மாநில அரசு போக்குவரத்துக்கழ கமான கேஎஸ்ஆர்டிசி இந்த சாதனை படைத்துள்ளது.
தொடக்கத்தில் தயங்கிய கேரள மக் களை, துல்லியம், வேகம் மற்றும் குறைந்த செலவில் இயக்குவது குறித்து கேஎஸ்ஆர்டி சியின் விரைவான சேவை வாடிக்கையாளர் களை நம்ப வைத்துள்ளது.
2023 ஜூன் 15 அன்று கூரியர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் செயல்படத் தொடங்கிய போது, மாத வருமானம் ரூ.1,95,000 மட்டுமே. இன்று ரூ.45 லட்சத்தை தாண்டி யுள்ளது. 16 மணி நேரத்தில் கேரளாவில் எங்கு வேண்டுமானாலும் கொரியர் டெலிவரி செய்து விடும் என்பதே வெற்றி ரகசியம். கேஎஸ்ஆர்டிசி ஒரு வருடத்தில் 4,32,000 கூரியர்களை வழங்கியுள்ளது. தினமும் 2,200 வாடிக்கையாளர்களை இணைக்கிறது. வாடிக்கையாளர் புகார்களைத் தீர்க்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையும் இதற்கு துணைபுரிகிறது. கே.எஸ்.ஆர்.டி.சி., உள்நாடு உட்பட, வீட்டுக்கு வீடு சேவை மற்றும் புதிய வாடிக்கையாளர்களை கண்ட றிவதற்கான செயல்பாட்டில் உள்ளது. திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயல்படுத்தப்படுவதால், வீடுகளில் இருந்து பொருட்களை சேகரிக்கும் நிலைக்கு திட்டம் மாறும். தனியார் கூரியர் சேவையை விட 30 சதவிகிதம் குறைவு.
வேன் சேவை தொடங்க திட்டம்
இரண்டாவது நன்மை என்னவென்றால், இந்த சேவை குறைந்த காலக்கட்டத்தில் கிடைக்கும். காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வேன் சேவைக்கான தேவை காரணமாக இரண்டு வேன் சேவை களை தொடங்க கேஎஸ்ஆர்டிசி தயாராகி வருகிறது. தனியார் கூரியர் சேவைகளுக்கு வேன்களில் இடத்தை வாடகைக்கு விடவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1 கிலோ முதல் 120 கிலோ வரை எடையுள்ள பொருட்களை பார்சல்களாக அனுப்பலாம். இதற்கு, டிப்போக்களில் உள்ள கவுண்டரில் பார்சல் மற்றும் கூரியர்களை செலுத்தினால் போதும். கேஎஸ்ஆர்டிசி-இன் வணிகப் பிரிவு நிர்வாகப் பொறுப்பில் உள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் கே.பி.கணேஷ்குமார் முயற்சியால், மாநில அரசின் ‘ஹில்லி அக்வா’ குடிநீர், கூரியர் மற்றும் தளவாட முகப்பு அலுவலகங்கள் மூலமாகவும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக விற்பனைக்காக வைத்திருந்த தண்ணீர் பாட்டில் அனைத்தும் 20 நாட்களில் விற்றுத் தீர்ந்துவிட்டன.