states

img

அரசமைப்பு சாசன விழுமியங்களை பாதுகாக்க ஸ்ரீ நாராயண குரு பெயரால் உறுதியேற்போம்!

செம்பழந்தி, பிப். 18 - “அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை பயன்படுத்தி அரசமைப்பு சாசன விழுமியங்களுக்கு குழி பறிக்கும் நிலை மாற வேண்டும். ஸ்ரீ  நாராயண குரு காட்டிய விளக்கின் ஒளியை ஒட்டுமொத்த சமுதாயத் திற்கும் பரவச் செய்ய வேண்டும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

செம்பழந்தி ஸ்ரீ நாராயண குரு குலத்தில் நடைபெற்ற ஆலுவா சர்வமத மாநாட்டின் நூற்றாண்டு விழா  கொண்டாட்டத்தின் மாநில அள விலான தொடக்க விழாவில் பினராயி விஜயன் கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசியதாவது:

மறுமலர்ச்சி வரலாற்றின் சிறப்பான மாநாடு

1893-ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற மாநாட்டிற்குப் பிறகு, ஸ்ரீ நாராயண குரு தலைமையில் ஆலுவா அத்வைத ஆசிரமத்தில் நடந்தது உலகின் மிகவும் பிரபலமான சர்வமத மாநாடாகும். நூற்றாண்டுக்கு முன் நடைபெற்ற இந்த சர்வமத மாநாடு மறுமலர்ச்சி வரலாற்றில் சிறப்பான நிகழ்வு.

1924-ஆம் ஆண்டு மார்ச் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் நடைபெற்ற மாநாட்டின் தொலைநோக்குப் பார்வை, ஒரு நூற்றாண்டு கடந்த பின்னரும் பொருத்தமானது. சர்வமத மாநாடு முன்வைத்த விஷயத்தை மிகவும் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய காலகட்டத்தை நாம் கடந்து செல்கிறோம்.

மனிதநேயச் சிந்தனையை வழங்கிய ஸ்ரீ நாராயண குரு
எல்லா மதங்களையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்பதும், மதங் களின் ஒழுக்க விழுமியங்கள் ஒன்று தான் என்பதும் அந்த பார்வை. மனித னின் முன்னேற்றத்திற்கான சமூகத் தொடர்புகள் எல்லா நேரங்களிலும் தேவை. சாதி, மதம், வெறுப்பு இல்லா தவர்கள் என்ற மனிதநேயச் சிந்தனை யை உலகுக்கு அருவிபுரம் பிரதிஷ்டை மூலம் குரு வழங்கினார். ஆத்மோப தேச ஷதகத்தின் மூலம், அனைத்து மதங்களின் சாரமும் ஒன்றே என்பதை குரு நிறுவினார். சடங்குகளின் அடிப்படையில் மதத்தை மதிப்பிடக் கூடாது என்ற நிலைப்பாட்டையும் சர்வமத மாநாடு மேற்கொண்டது. மதம் என்பது சண்டை போட்டு ஒழிக்கக் கூடிய ஒன்றல்ல என்பதை இது உலகுக்கு உணர்த்தியது.

சாதி இல்லை என்ற பிரகடனத்தின் நூற்றாண்டு
மறுமலர்ச்சியின் விழுமியங்களை நிலைநிறுத்தும் அணுகுமுறையுடன் மாநில அரசு முன்னேறி வரு கிறது. எமக்கு சாதி இல்லை என்ற  பிரகடனத்தின் 100-ஆவது ஆண்டு  நிறைவு, குருவின் பெயரால் திறக்கப் பட்ட திறந்த பல்கலைக்கழகம், கட வுளின் தசாப்தத்தின் 100-ஆவது ஆண்டு விழா போன்றவை உதார ணங்களாகும்.

சர்வமத மாநாட்டை சர்வமத உரை யாடல் மற்றும் ஒற்றுமையாக ஸ்ரீ  நாராயண குரு கருதினார். இவையே தற்போதுள்ள அரசமைப்பு விழு மியங்கள். ஆனால் இன்றும் சமூ கத்தில் அதன் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.

விழாவுக்கு அமைச்சர் சஜி செரியன் தலைமை வகித்தார். அமைச்சர் வி. சிவன்குட்டி, மேயர் ஆர்யா ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் கடகம்பள்ளி சுரேந்திரன், வி. ஜாய், கலாச்சாரத் துறை செயலர் மினி ஆண்டனி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் டி.  சுரேஷ்குமார், கர்தினால் மார் பசேலி யோஸ் கிளமிஸ் கத்தோலிகா பாவா, டாக்டர். வி.பி. சுஹைப் மௌலவி, சச்சிதானந்த சுவாமிகள், ஐ.எம்.ஜி. இயக்குநர் கே. ஜெயக்குமார், கலாச் சாரத் துறை இயக்குநர் என். மாயா மற்றும் சமய குருக்கள், பொது ஆர்வலர்கள், சமூக, கலாச்சார தலைவர்கள் கலந்து கொண்டனர்.