திருவனந்தபுரம்,அக்.12- கேரளத்தில் இந்த ஆண்டு 500 ஏக்கரில் 30 தனியார் தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று கேரள தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் அறி வித்துள்ளார். தற்போது 11 பூங்காக்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ள தாகவும், மேலும் மூன்றிற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் அவர் கூறியுள்ளார். திருவனந்தபுரம் மேலாண்மை சங்கம் (டிஎம்ஏ)-2023 சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மேலாண்மை தலைமை விருதை கேரள டிஜிட்டல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்.சஜி கோபிநாத்துக்கு அமைச்சர் வழங்கினார். அப்போது அமைச்சர் பி.ராஜீவ் பேசுகையில் , அரசுத் துறையைத் தவிர, தனியார் பூங்காக்களை மேம்படுத்துவதன் மூலம் தொழில் முனைவோரை ஈர்த்து வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. தனியார் பூங்காக்களுடன், வளாக தொழில் பூங்காக்களும் ஊக்குவிக்கப்படும். மூன்று பல்கலைக்கழகங்களும், 30 பொறியியல் கல்லூரிகளும் வளாகப் பூங்காக்களை அமைக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.