states

img

தில்லி தலைமைக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டேன்!

மதுபாய் ஸ்ரீவத்சவா எம்எல்ஏ ஆவேசம்

அகமதாபாத், நவ. 15 - குஜராத் தேர்தலில், அதிருப்தி தலைவர்கள் பலர் சுயேட்சையாக போட்டியிடுவது பாஜக-வுக்கு தலை வலியாக அமைந்துள்ளது. இதுவரை 5-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் சுயேட்சையாக மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். இவர்களில், 6 முறை எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுபாய்  ஸ்ரீவத்சவா, பாஜக-வின் தில்லி தலை மைக்கு பாடம் புகட்டியே தீருவேன் என்று சவால் விடுத்துள்ளார். குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5 ஆம் தேதிகளில் இரண்டு  கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி ஆளும் பாஜக கட்சி 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அண்மை யில் வெளியிட்டிருந்தது. இதில் தற்போது மாநில அமைச்சர்களாக உள்ள 5 பேர் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் உட்பட மொத்தம் 38 எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் தேர்த லில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட வில்லை.

இவர்களில் வக்ஹோடியா தொகுதி  பாஜக எம்எல்ஏ மதுபாய் ஸ்ரீவத்சவா-வும் ஒருவர். 1995-இல் சுயேட்சையாக நின்று வெற்றிப் பெற்ற இவர், பின்னர் பாஜக-வில் இணைந்து தொடர்ந்து தேர்தல்களில் வெற்றிப் பெற்று, தற்போது ஆறாவது முறை எம்எல்ஏ வாக இருந்து வருகிறார். இந்நிலை யில், கட்சித் தலைமை தமக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்காததால் ஸ்ரீவத்சவா கடும் அதிருப்தி அடைந்துள்ளார். “1995 சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக நின்று அமோக வெற்றிப் பெற்றேன். அப்போது குஜராத் மாநில பாஜக-வில் உயர் நிர்வாக பொறுப்பில் இருந்த மோடியும், அமித் ஷா-வும் எனது வெற்றியைக் கண்டு வியந்து, பாஜகவில் சேர எனக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களி்ன் வேண்டுகோளுக்கு இணங்கதான் 25 ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் சேர்ந்தேன். அப்போது இருந்து தொடர்ந்து 5 முறை தேர்தலில் வெற்றிப் பெற்று கட்சிக்கு பெருமை சேர்த்துள்ளேன். ஆனால் இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு, எனக்கு பதிலாக வதோ தரா தொகுதி பாஜக மாவட்டத் தலை வர் அஸ்வின் படேலுக்கு வாய்ப்பு  அளிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி்த்  தேர்தலி்ல் கூட வெற்றி பெறாத அவ ருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளதால் கட்சித் தலைமை மீது கடும் கோபத் தில் உள்ளேன்” கட்சியின் தில்லி தலை மையின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி யாக, வரும் தேர்தலில் மீண்டும் சுயேச்சையாக களமிறங்கி பாஜக-வுக்கு பாடம் புகட்ட உள்ளேன்’’ என்று மதுபாய் ஸ்ரீவத்சவா ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

குஜராத்தில் மதுபாய் ஸ்ரீவத்சவா மட்டுமல்லாமல், பாஜக தலைவர்கள் பலரும் கட்சித் தலைமைக்கு எதிராக கொடி பிடிக்க ஆரம்பித்துள்ளனர். பாஜக முன்னாள் எம்எல்ஏ-வும்  பழங்குடியினர் சமூகத் தலைவரு மான ஹர்ஷத் வாசவா, நந்தோட் (தனி) தொகுதியில் சுயேட்சையாக போட்டி யிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளாா். தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியில், கட்சியின் பழங்குடியின பிரிவு தலை வர் பதவியில் இருந்தும் அவர் விலகி யுள்ளார். இதேபோல முன்னாள் எம்எல்ஏ-க்கள் தினேஷ் படேல், சதீஷ்  படேல், அர்விந்த் லதானி ஆகியோ ரும் சுயேட்சையாக போட்டியிட தீவி ரம் காட்டி வருகின்றனர். இது பாஜக- வுக்கு தலைவலியாக அமைந்துள்ளது. இதையடுத்து, பாஜக மாநில பொதுச் செயலாளர் பார்கவ் பட்,  ஒன்றிய இணையமைச்சர் ஹர்ஷ்  சங்கவி ஆகியோர் அதிருப்தியாளர் களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.