states

img

ஊஞ்சல் கயிறு இறுக்கி சிறுமி பரிதாப பலி

பெங்களூருவில்  ஊஞ்சல் கயிறு இறுக்கியதில் 11 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
பெங்களூருவில் பெற்றோர் கீழ்தளத்தில் இருந்த போது, அவர்களது 11 வயது மகள் முதல் தளத்தில் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறாள். நீண்ட நேரமாக சத்தம் இல்லாததால் பெற்றோர் மாடிக்குச் சென்று பார்த்தனர். அப்போது, அந்த ஊஞ்சல் கயிற்றில், சிறுமி சிக்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இது குறித்து காவலர்கள் இயற்கைக்கு புறம்பான மரணம் என்று வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் தந்தை அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.