கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மேகவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தனது வீட்டில் இருந்து சாண்ட்ரோ காரில் வெளியே சென்ற தர்மேகவுடா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிக்மகளூரு அருகே கடூரில் ரயில் தண்டவாளத்தின் பக்கத்தில் தர்மேகவுடாவின் உடலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறித்து தர்மேகௌடா கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படும் கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த தர்மேகௌடா ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.