states

img

உத்தரபிரதேசம்: கார் மீது லாரி மோதி விபத்து - 8 பேர் பலி

உத்திரபிரதேசத்தில் நடந்த சாலைவிபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
உத்திரபிரதேச மாநிலம் தேவிகஞ்சில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஷாஜாத் பூர் வழியாக காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது காதா தாம் பகுதியில் மணல் லாரி எதிரே வந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் அபிநந்தன் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார். மேலும் காரில் பயணித்த 2 சிறுமிகள் காயங்களுடன்  மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
இந்நிலையில் லாரி ஓட்டுநர் தலைமறைவாகி உள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்க பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;