states

img

உ.பி: மருத்துவ முகாமுக்கு சென்ற 38 மாணவர்களுக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி

உத்தரப் பிரதேசத்தின் ஹர்டோயில், மருத்துவ முகாமுக்குச் சென்ற 38 மாணவர்கள் வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோயில் உள்ள கஸ்தூர்பா காந்தி அவாசிய பாலிகா வித்யாலயா பள்ளியிலிருந்து பிஹானி மருத்துவ முகாமுக்கு மாணவர்கள் நேற்று சென்றுள்ளனர். அங்கு கொடுக்கப்பட்ட மாத்திரையை சாப்பிட்ட 38 மாணவர்களுக்கு சில மணி நேரத்திலேயே வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து, 32 மாணவர்கள் குணமடைந்துள்ளதாகவும், 6 மாணவர்கள் மட்டும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருகிறதாகவும்  துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் சுவாதி சுக்லா தெரிவித்துள்ளார்.
 

;