தனியார் பல்கலைக்கழகத்தில் இந்துத்துவாவிற்கும் பாசிசத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்னவென்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது கல்வியாளர்களிடையே சர்ச்சையை ஏற்படத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ள சாரதா பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் முதல் ஆண்டு பொலிட்டிகல் சயின்ஸ் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் இந்துத்துவாவிற்கும் பாசிசத்திற்கும் இடையேயான ஒற்றுமைகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது தொடர்பான புகைப்படம் இணையத்தில் பரப்பியது. இது கல்வியாளர்களிடையே கடும் சர்ச்சை எழுப்பியது.
இந்நிலையில், தற்போது இதனை உறுதிப்படுத்திய பின்பு எதற்காக இப்படியான கேள்வி கேட்கப்பட்டது என சாரதா பல்கலைக்கழகத்திடம் யுஜிசி(பல்கலை மானியக் குழு) விளக்க அறிக்கையை கேட்டுள்ளது.