states

img

மத மாற்றச்சட்டத்தின்கீழ் வழக்கு கைது செய்வதற்கு உயர்நீதிமன்றம் தடை

உத்தரப்பிரதேச மத மாற்றச் சட்டத்தின்கீழ் முஸ்லீம்கள் இருவரைக் கைது செய்திருப்பதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்ற அவசரச் சட்டம்,2020 பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, இந்துப் பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக நதீம் என்பவர் மீதும், அதற்குத் துணையாக இருந்ததாக அவர் சகோதரர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேற்படி இருவரையும் கைது செய்யக்கூடாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின்மீது உயர்நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பித்தனர்.

 

;