states

img

சையது மோடி சர்வதேச பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து  

சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.  

உத்தரபிரதேசத்தின் லக்னோ நகரில் சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வந்தது. இந்த சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் இறுதிப்போட்டியானது இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  

இந்த மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்துவை எதிர்த்து எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆம் ஆண்டு பி.டெக் படித்துவரும் நாக்பூரைச் சேர்ந்த 20 வயதான மாளவிகா பன்சோட் மோதினார்.    இந்த ஆட்டத்தில் 21-13, 21-16 என்ற நேர்செட் கணக்கில் மாளவிகா பன்சோட்டை வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.  

இறுதி போட்டி வரை முன்னேறி இளம் வீராங்கனை மாளவிகா பன்சோட் வெள்ளிப் பதக்கம் வென்றார்.