states

img

”டிரக்கிங்” சென்ற 22 பேர் மாயம் – 9 பேர் சடலமாக மீட்பு!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சாஸ்திரா தல் நதிக்கு டிரக்கிங் சென்ற 22 பேர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசியில் சாஸ்திரா தல் நதியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் டிரக்கிங் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மலையேற்றத்தில் ஈடுபட்ட 22  பேர் திடீரென மாயமாகி உள்ளனர்.

மோசமான வானிலை காரணமாக வழியிலேயே தொலைந்த நிலையில், அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், மோசமான வானிலை நிலவி வருவதால், அந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் பயண்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், மீட்டுப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

;