இமயமலைச் சாரலில் உள்ள உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிர யாக் மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் 23 பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் அங்குள்ள அலக் நந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள் ளானது. இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் ஆற்றில் காணாமல் போயினர். சனியன்று மாலை நிலவரப்படி மேலும் 4 உடல்கள் மீட்கப்பட்டதையடுத்து பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள 11 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காணா மல் போனவர்கள் அனைவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது என மீட்பு பணிக்குழு தகவல் தெரி வித்துள்ளது.